மனிதர்களில் யாரும் தொட்டுக் கூட பார்க்க முடியாது என்ற உயரத்தில் உச்ச நடிகையாக இருந்தவர் நடிகை சிம்ரன். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை சிம்ரன்.
தொண்ணூறுகளின் பலரது கனவுக் கன்னியாக வலம் வந்தார். தனக்கேற்ற கதாபாத்திரங்களில் தற்பொழுது தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். சமீபத்தில் தங்க நிற புடவையில் தங்கச்சிலை போல ஜொலிக்கும் இவரது புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.
சட்டம் போட்டு தடுக்கணும்..
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்ன சிம்ரன் இதெல்லாம்.. இவ்வளவு அழகு எங்கே பதுக்கி வைத்திருந்தீர்கள். அழகை பதுக்குவது சட்டப்படி குற்றம் என்று சட்டம் போட்டு தடுக்கணும். அப்போது தான் இப்படியான அழகான புகைப்படங்களை பார்க்க முடியும் என்று கருத்து கூறி வருகின்றனர்.
தமிழில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை சிம்ரன் ஆரம்பத்தில் இருந்தே பிறகே தன்னுடைய கவர்ச்சியால் ரசிகர்களை தன் வசப்படுத்தினார். தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து ஆகிவிட்டது என்ற நிலையில் இருந்த நடிகை சிம்ரனுக்கு ஒரே ஒரு குறை.
அதுதான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இதுவரை நடிக்கவில்லை என்ற ஒரு விஷயம். ஆனால் அதனையும் பேட்ட என்ற திரைப்படத்தில் நடித்து தீர்த்துக் கொண்டார் நடிகை சிம்ரன்.
இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம்தான் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. அம்மணியின் இந்த அழகை வர்ணித்து ரசிகர்கள் கவிதைகளை எழுதி வருகின்றனர்.