பல வருஷம் பொறுமையா இருந்தேன்.. மன்னிப்பு கேட்டே ஆகணும்.. விஜய் விஷயத்தில் கடுப்பான சிம்ரன்..!

நடிகை சிம்ரன் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்கள் பலருடனும் சேர்ந்து நடித்தவர் ஆவார். தன்னுடைய இளமை காலங்களில் செய்தி வாசிப்பாளராக வாழ்க்கையை துவங்கிய சிம்ரனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து சிம்ரன் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் பெரும் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். அப்பொழுது பிரபலமாக இருந்த விஜய் அஜித்தில் துவங்கி ரஜினி கமல் என்று அதற்கு முன்பு பிரபலமாக இருந்த நடிகர்களுடன் கூட சேர்ந்து கதாநாயகியாக நடித்திருக்கிறார் சிம்ரன்.

பொறுமையா இருந்தேன்

அந்த அளவிற்கு சிம்ரன் தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு நடிகையாக இருந்திருக்கிறார். இப்பொழுது சிம்ரன் பெரிதாக சினிமாவின் மீது ஆர்வம் காட்டுவது கிடையாது. ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அவ்வப்போது வாய்ப்புகள் வந்தால் மட்டும் நடித்து கொடுத்துக் கொண்டிருக்கிறார் சிம்ரன்.

இந்த நிலையில் தொடர்ந்து சிம்ரன் மீது ஏதாவது ஒரு சர்ச்சை என்பது தொடர்ந்து சமூக வலைதளங்களில் வந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் இதனால் கோபமடைந்த சிம்ரன் இதற்கு சமீபத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

மன்னிப்பு கேட்டே ஆகணும்

அதற்கு முக்கிய காரணம் ஒரு யூ ட்யூப் சேனலில் பேசிய பேச்சுக்களே என்று கூறப்படுகிறது. சிம்ரன் தளபதி 69 திரைப்படத்தில் தயாரிக்க ஆசைப்பட்டதாக கூறியதாகவும் ஆனால் விஜய் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றும் ஒரு பேச்சு சமூக வலைதளங்களில் உலாவி வந்தது.

இந்த நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்த சிம்ரன் கூறும் பொழுது இப்படி சிலர் நம்மள எமோஷனலா மேனிப்ளேட் பண்றாங்க.

கடுப்பான சிம்ரன்

அதை நம்ம நண்பர்கள் கொஞ்சம் கூட கேர் பண்ணாம இருக்கிறது மனசுக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கு. நான் ரொம்பவே அமைதியா தான் இருந்தேன் ஆனா இப்ப இத தெளிவு படுத்திக்கிறேன் நான் ஒன்னும் எந்த பெரிய ஹீரோக்களையும் வொர்க் பண்ணனும்னு லைன்ல நின்னுட்டு இல்ல நான் எல்லாமே பண்ணி முடிச்சிட்டு தான் இப்ப இங்க இருக்கேன் என்னோட குறிக்கோள் எல்லாமே இப்போ வேற.

ஒரு பெண்ணா என்னுடைய எல்லை என்னென்ன எனக்கு தெரியும் ரொம்ப வருஷமா என்னோட பேரு ஏதாவது ஒரு சோசியல் மீடியால அடிபடும்போதெல்லாம் நான் அமைதியாக தான் இருந்தேன். ஆனால் சுயமரியாதை ரொம்ப முக்கியம். ஸ்டாப் அப்படிங்கிறது ரொம்ப பவர்ஃபுல்லான வார்த்தை.

நான் எப்போதுமே உண்மை பக்கம் தான் இப்ப இதையேதான் நான் இன்டஸ்ட்ரீல இருக்குற மத்தவங்க கிட்ட எதிர்பார்க்கிறேன். இப்படி புரளியை பரப்புறவங்க என்கிட்ட மன்னிப்பு கேட்டே ஆகணும் என்று பதிவிட்டு இருக்கிறார் சிம்ரன்.

About Jiraya

Check Also

“அந்தப் பெண்ணை தொடர்புபடுத்துவது தேவையில்லாதது” உண்மை ஒருநாள் வெளிவரும் – கொந்தளித்த ஜெயம் ரவி..

தற்போது இணையம் எங்கும் ஜெயம் ரவி ஆர்த்தி விவகாரம் படு வேகமாக பரவி வந்ததை அடுத்து ஜெயம் ரவிக்கும் கோவாவை …

Exit mobile version