கிசுகிசு : பொதுவாக சினிமா டிகைகள் பலரும் திருமணம் என்று வரும்பொழுது தொழிலதிபர்கள்.. ஏற்கனவே தங்களுடைய வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்ட பெரும் பணக்காரர்களை வாழ்க்கை துணையாக தேர்வு செய்வார்கள்.
இன்னும் சிலர் பணக்காரராக இல்லை என்றாலும் பரவாயில்லை அவர் வெளிநாட்டவராக இருக்க வேண்டும் என்று வெளிநாட்டை சேர்ந்தவர்களை திருமணம் செய்து கொள்வார்கள்.
அதிலும் சிலர் திரைத்துறையில் இருப்பவர்களையே காதலித்து திருமணம் செய்து கொள்வது வாடிக்கையான ஒன்று. இதனாலேயே சினிமா பிரபலங்கள் திருமணம் செய்து கொள்ளும் பொழுது அது மிகப்பெரிய பேசுபொருளாக மாறுகிறது.
இதனை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம். இந்நிலையில் 90களில் முன்னணி நடிகையாக இருந்த அந்த சுகமான நடிகை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கவர்ச்சிக்கணியாக சிம்மாசனம் போட்டு அமர்ந்தார்.
சினிமாவில் அறிமுகமான புதியில் குடும்பம் பாங்கினியாக நடித்து வந்த அவர் அடுத்தடுத்த படங்களில் பட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சியான காட்சிகளில் புகுந்து விளையாடினார் முன்னணி.
கவர்ச்சி ஹீரோயின்களே ஓரம் கட்டும் அளவுக்கு பட்டு கிளாமரான காட்சிகளில் நடித்து தமிழ் சினிமா நடிகைகளின் சிம்ம சொப்பனமாக விளங்கினார் சுகமான நடிகை. தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அவர் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அமெரிக்காவை சேர்ந்த ஒருவரை உருக உருக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் செய்த கையோடு சுகமான வாழ்வை தேடி அமெரிக்காவுக்கு சென்று விட்டார் சுகமான் நடிகை, ஆனால் அமெரிக்கா சென்ற நாள் முதல் அவருடைய வாழ்க்கையில் எந்த ஒரு மகிழ்ச்சியும் இல்லை. ஒரு நடிகை என்ற ஒரே காரணத்தினால் இவருடைய கணவர் இவரிடம் கேட்க கூடாத பல கேள்விகளை கேட்டிருக்கிறார்.
ஆனால் தன்னுடைய கணவர் தானே என்று தானும் எவ்வளவோ விஷயங்களை வெளிப்படையாக பேசியிருக்கிறார் நடிகை. ஆனாலும், ஒரு கட்டத்தில் அவருடைய கேள்விகள் நாள்தோறும் அவரை துளைத்தெடுத்திருக்கிறது.
திருமண வாழ்க்கையை கொண்டாடாமல்.. திருமண வாழ்க்கையை எண்ணி கூட பார்க்காமல்.. நாள்தோறும் நடிகையைப் பற்றி ஏதோ ஒரு ரகசியம் இருக்கிறது அவர் யாருடனும் ரகசிய உறவில் இருக்கிறாரா.. என்ற நினைப்பிலேயே வித்தியாசமான விவகாரமான கேள்விகளை நடிகையை நோக்கி வீசி இருக்கிறார் அவருடைய கணவர்.
பதில் சொல்லி பதில் சொல்லி வெறுத்துப் போன நடிகை ஒரு கட்டத்தில் நீயும் வேண்டாம் நீ கட்டின தாலியும் வேண்டாம் என்று அவர் கட்டிய தாலியை அங்கேயே கழட்டி வீசிவிட்டு இந்தியாவிற்கு திரும்பி இருக்கிறார். இப்படி உருக உருக காதலித்து ஒருவரை திருமணம் செய்து கொண்டு ஒரே வருடத்தில் அவரை விவாகரத்து செய்து இருக்கிறார் நடிகை.