திருமணம் சீரியல் சித்து இப்படிப்பட்டவரா..? அவர் மனைவி ஷ்ரேயா சொல்றதை கேளுங்க..!

ஷ்ரேயா,(Shreya) தமிழ் டிவி சேனல்களில் பிஸியாக உள்ள ஒரு நடிகை. இவரது கணவர் சித்து, இவரும் ஒரு பிரபலமான சீரியல் நடிகர்தான். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்,திருமணம் என்ற சீரியலில் சித்து – ஷ்ரேயா நடித்தனர். அந்த சீரியல் முடிவடைந்த நிலையில், அந்த சீரியலில் ஜோடியாக நடித்த ஸ்ரேயா –சித்து, திருமணம் செய்து கொண்டனர்.இதற்கு முன்பே, சன்டிவியில் நந்தினி என்ற சீரியலில் நடித்து, ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக இருந்தவர் ஷ்ரேயா.

திருமணம் சீரியல் நடித்த போது ஷ்ரேயா – சித்து இருவருக்கும் காதல் ஏற்பட்டதை, இருவரும் வெளிப்படையாக ரசிகர்களுக்கு தெரிவித்தனர். அந்த சூழலில் ‘லிவிங் டு கெதர்’ முறையில் இருவரும் வாழ்ந்து வருவதாகவும் ஒரு தகவல் பரவியது.

Shreya,

ராஜா ராணி 2 சீரியலில் சரவணன் கேரக்டரில், சில ஆண்டுகளாக சித்து நடித்து வருகிறார். இந்த கதையின் ஹீரோ இவர்தான்.கடந்த ஆண்டில், சித்து – ஷ்ரேயா இருவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில் அவர்களை சின்னத்திரை பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்தி மகிழ்ந்தனர்.தற்போது ஜீ தமிழ் டிவியில் ஒளிரப்பாகி வரும் ரஜினி என்ற சீரியலில் கதாநாயகியாக ஷ்ரேயா நடித்து வருகிறார்.சமீபத்தில், ஒரு நேர்காணலில் பேசிய ஷ்ரேயா,
திருமணத்துக்கு பிறகும் எங்கள் இருவருடைய காதலும் மறையவில்லை. மாறவில்லை.

Shreya,

அப்படியே தான் இருக்கிறது. அந்த காதலின் மகத்துவத்தை ஒவ்வொரு நாளும் உணர்ந்துகொண்டே தான் இருக்கிறோம். தினமும் எங்களுக்கு காதலர் தினம் போலவே, வாழ்க்கை இருக்கிறது. அந்த அளவுக்கு சித்து, என் மீது அன்பாக இருக்கிறார். அடிக்கடி சர்ப்ரைஸ் ஆக எனக்கு கிப்ட் வாங்கி கொடுக்கிறார்.

நான் ஒரு டான்சர். பி.காம் பைனல் இயர் நான் படித்த போதே, சினிமாவில் ஆக்டிவ் வாய்ப்புகள் நிறைய வந்தது. கன்னடத்தில் சீரியல், படங்களில் நடித்தேன். திருமணம் சீரியலில் நடித்த போது சித்துவுடன் காதல் வந்தது. இரு வீட்டாரிடம் கூறி அவர்களது முழு சம்மதம் பெற்று, எங்களது திருமணம் நல்லபடியாக நடந்தது.

Shreya,

என் மனம் நினைத்தபடி சித்து இருக்கிறார். அவரிடம் நிறைய விஷயங்கள் எனக்கு பிடித்த மாதிரி இருந்தது. சித்துவை எப்போதும் நான் மிஸ் பண்ணவே மாட்டேன். திருமணத்துக்கு பிறகுதான், நான் மிக சந்தோஷமாக வாழ்கிறேன். மிகச் சிறந்த பரிசாக, சித்து எனக்கு கிடைத்திருக்கிறார். ஒரு நல்ல கணவருக்கான அத்தனை சிறந்த குணங்களும் அவருக்கு உண்டு. நான் அதிர்ஷ்டம் செய்தவளாக இருக்கிறேன்.

Shreya,

சித்து பிரமாதமாக சமைப்பார். சிக்கன் குழம்பு, மட்டன் கிரேவி என, நான்வெஜ் அயிட்டங்களை மிக ருசியாக சமைப்பார். என்னை திருமணம் செய்துகொள்ள, பெண் கேட்க வரும்போது, எங்களது மொழியில் பெண் கேட்க வேண்டும் என்பதற்காக, துளு மொழி கற்றுக்கொண்டார். இப்படி, எங்களது வாழ்வில் நிறைய சுவாரசியமான விஷயங்கள் இருக்கின்றன. எங்களது காதல் வாழ்க்கை திருமணத்துக்கு பிறகும் அதே காதல் வழியில் பயணிக்கிறது, என்று ஷ்ரேயா கூறி இருக்கிறார்.மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

பகலில் மாஸ்டர் இரவில் கொடூரன்.. படியாத பெண்களை மிரட்டி சூறையாடிய ஜானி!! 21 வயது பெண் பட்ட கொடுமைகள்..

கேரளாவில் ஹேமா கமிஷன் வெளிவந்து இந்தியாவில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த சூடு தனியாக முன்பே …

Exit mobile version