செல்ஃபியால் கடுப்பான A டூ Z திரை பிரபலங்கள்.. செல்ஃபி கேட்டது குத்தமா? மிரண்ட ரசிகர்கள்..

செல்ஃபியால் கடுப்பான A டூ Z திரை பிரபலங்கள்.. செல்ஃபி கேட்டது குத்தமா? மிரண்ட ரசிகர்கள்..

திரையுலக பிரபலங்கள் என்றாலே பொதுமக்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய வரவேற்பு இருக்கும். அதுவும் தனக்குப் பிடித்த ஹீரோயினி என்றால் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அப்படிப்பட்ட பிரபலங்களை பார்க்கும் போது செல்ஃபி எடுக்கும் கலாச்சாரம் தற்போது அதிகரித்து வருகிறது.

செல்ஃபியால் கடுப்பான A டூ Z திரை பிரபலங்கள்.. செல்ஃபி கேட்டது குத்தமா? மிரண்ட ரசிகர்கள்..

அந்த வகையில் ஆசை ஆசையாய் செல்ஃபி எடுக்க சென்ற ரசிகர்களை தரக்குறைவாக நடத்தியும் முகத்தை சுளித்து ரசிகர்களை மிரள விட்ட திரை பிரபலங்கள் யார் யார் என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.

செல்பியால் கடுப்பான A டூ Z திரை பிரபலங்கள்..

நடிகர் சிவகுமார்:

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக திகழும் சூர்யா மற்றும் கார்த்தியின் தந்தையான நடிகர் சிவகுமார் தன்னுடன் செல்ஃபி எடுக்க வந்த ரசிகரின் போரை தட்டி விட்டு சென்றதோடு மட்டுமல்லாமல் பார்த்த பார்வையால் அந்த ரசிகர் ஒரு நிமிடம் தடுமாறி விட்டார்.

அதுமட்டுமல்லாமல் அது ஒரு பொது நிகழ்வு என்பதால் தன்னுடைய நண்பர் ஒருவர் சால்வையை அணிவிக்க வந்த போது கூட அதை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் பிடுங்கி எறிந்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

தல அஜித் குமார்:

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக இருக்கக்கூடிய தல அஜித் பொதுவெளியில் அதிகம் தலைக்காட்ட விரும்பாதவர். இவர் 2021 – ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது வாக்களிக்க வந்த வேளையில் ரசிகர் ஒருவர் அவரோடு செல்பி எடுக்க முயற்சி செய்தார்.

செல்ஃபியால் கடுப்பான A டூ Z திரை பிரபலங்கள்.. செல்ஃபி கேட்டது குத்தமா? மிரண்ட ரசிகர்கள்..

என்ன சமயத்தில் தனது கட்டுப்பாட்டை இழந்த கடுப்பான அஜித் ரசிகரின் செல்போனை பிடுங்கி கொண்டார். அத்தோடு வாக்களித்த பிறகு திரும்பி வந்து அந்த போனை அந்த ரசிகர்களிடம் கொடுத்தார்.

நடிகை நயன்தாரா:

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா தன் கணவருடன் கடந்த ஆண்டு குலதெய்வம் கோயிலுக்கு நேர்த்திக்கடனுக்காக சென்று இருந்தார். தாராசுரம் கோவிலுக்கு சென்ற நயன்தாராவின் மீது கை போட்டு ஒரு பெண் செல்பி எடுக்க முயற்சி செய்திருக்கிறார்.

இதை அடுத்து கடுப்பாக்கிப் போன நயன்தாரா அவரைப் பார்த்து முறைத்ததோடு மட்டுமல்லாமல் முகம் சுளிக்க கூடிய வகையில் நடந்து கொண்டவை அடுத்து இந்த நிகழ்வானது பரபரப்பாக இணையம் எங்கும் பேசப்பட்டது.

பிற மொழி நடிகர்கள்:

இவர்களைப் போலவே தெலுங்கு நடிகரான பாலகிருஷ்ணாவும் இதுபோன்று செல்ஃபி விவகாரத்தில் மாட்டிக் கொண்டதோடு மட்டுமல்லாமல் ஆசையாக செல்ஃபி எடுக்க வந்த ரசிகர்களை செல்போனை தட்டி விட்ட சம்பவம் இணையம் எங்கும் வெகுவாக பரவி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருள் ஆனது.

செல்ஃபியால் கடுப்பான A டூ Z திரை பிரபலங்கள்.. செல்ஃபி கேட்டது குத்தமா? மிரண்ட ரசிகர்கள்..

நடிகர் நாகார்ஜுனா தெலுங்கு திரைகடகில் முன்னணி நடிகராக திகழ்வர். இவர் ஹைதராபாத் விமான நிலையத்திற்கு சென்ற போது அவரை சந்தித்த ரசிகர் ஒருவர் வந்ததோடு செல்பி எடுக்க முயற்சி செய்ததை அடுத்து பவுன்சர்களை வைத்து அந்த நபரை தரதரவென்று இழுத்துப் போட்டதை கண்டும் காணாத படி சென்றார். இந்த விஷயம் பூதாகரமானதால் கடைசியாக வேறு வழியின்றி அந்த ரசிகர்களோடு இணைந்து போட்டோ எடுத்துக் கொண்டார்.

இதனை எடுத்து இந்த விஷயமானது தற்போது ரசிகர்களின் மத்தியில் அதிக அளவு படிக்கப்படுகின்ற விஷயங்களில் ஒன்றாக மாறிவிட்டதோடு மட்டுமல்லாமல் செல்ஃபி காரணத்தால் இத்தனை நடிகர்கள் தங்களை இழந்து ரசிகர்களை துன்பப்படுத்தினார்களா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

About Janett J

Avatar Of Janett J

Check Also

பிரபல பாடகியுடன் ஜெயம் ரவி குடித்தனம்.. கோவாவில் கூத்து.. ஆதாரத்தை வெளியிட்ட குடும்ப உறுப்பினர்..!

பிரபல பாடகியுடன் ஜெயம் ரவி குடித்தனம்.. கோவாவில் கூத்து.. ஆதாரத்தை வெளியிட்ட குடும்ப உறுப்பினர்..!

திரை உலக வட்டாரத்தை திருப்பி போடக்கூடிய வகையில் ஜெயம் ரவி வெளியிட்ட விவாகரத்து அறிக்கை கடுமையான அதிர்வலைகளை சினிமாத்துறை இடையே …