Tuesday, September 24

21 வயசுல கல்யாணம் செஞ்சது தப்பா..? நான் இப்படி போனது உண்மையா…? சிவரஞ்சனி எமோஷனல்..!

நிலா பெண்ணே திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகமான நடிகை சிவரஞ்சனி பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கும். இவரது வித்தியாசமான கண்ணழகை பார்த்து பலரும் இவரை தனது கனவு கன்னியாகவே நினைத்து வாழ்ந்தார்கள்.

மெதுவாய் தந்தி அடிக்கும் என்ற பாடல் வரிகள் இன்று கூட ரசிகர்களால் விரும்பி கேட்கப்படக் கூடிய பாடல்களில் ஒன்றாக இருப்பதோடு இந்த பாடலில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி அன்றே தனக்கு என்று ஓர் ரசிகர் படையை அமைத்துக் கொண்டவர்.

21 வயசுல கல்யாணம் செஞ்சது தப்பா..?

இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். 1991 மனசார வாழ்த்துங்களேன் படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் ரீச் ஆன இவர் தலைவாசல், தங்க மனசுக்காரன், சின்ன மாப்பிள்ளை, பொன்விலங்கு, தாலாட்டு ராஜதுரை போன்ற படங்களில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியவர்.

இதனை அடுத்து இவருக்கு பல பட வாய்ப்புகள் தேடி வந்தது. அந்த வகையில் அரண்மனைக் காவலன், ராசா மகன், வண்டி சோலை சின்னராசு, செந்தமிழ்ச்செல்வன் போன்ற படங்களில் நடித்திருக்க கூடிய இவர் திரைப்படங்களில் பீக்காக இருக்கும் போதே தெலுங்கு படங்களிலும் அதிக அளவு நடித்திருக்கிறார்.

இந்நிலையில் 21 வயது நிறைந்த இவர் தெலுங்கு பட ஹீரோவான ஸ்ரீ காந்த்தை திருமணம் செய்து கொண்டு ஹைதராபாத்தில் செட்டில் ஆகிவிட்டார். குடும்பம் குட்டி என்று செட்டிலான இவர் இதை அடுத்து திரைப்படங்களில் நடிப்பதில் அதிக அளவு ஆர்வம் காட்டாமல் இருக்கிறார்.

நான் இப்படி போனது உண்மையா…?

இதனை அடுத்து பேட்டியின் போது 21 வயதில் நான் திருமணம் செய்து கொண்டது என்ன தவறா? என்று கேட்டதோடு திருமணத்திற்கு பிறகு குழந்தைகளோடும் கணவரோடும் மிகவும் சந்தோஷமாக இருப்பதாக சொல்லி இருக்கிறார்.

மேலும் தற்போது வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் வாய்ப்புகள் வந்த வண்ணம் தான் உள்ளது. எனினும் எனக்கு என் வீட்டை விட்டு வேறு இடத்திற்கு சென்றார் அவ்வளவு ஈசியாக உணர முடியாத காரணத்தால் அந்த வாய்ப்புகளை வேண்டாம் என்று மறுத்துவிட்டதாக சொல்லி இருக்கிறார்.

மேலும் தெலுங்கு படங்களில் நடிக்கும் போது அவரை திருமணம் செய்து கொண்டாலும் நான் மிகவும் சிறப்பாக தற்போது இருக்கிறேன். பிள்ளைகள் வளர்ந்து காலேஜுக்கு செல்லக்கூடிய சூழ்நிலையில் வாய்ப்பு கிடைத்தால் நடிக்க முயற்சி செய்வேன் என்ற கருத்தையும் சொல்லி இருக்கிறார்.

சிவரஞ்சனி எமோஷனல்..

இப்படி நடிகை சிவரஞ்சனி தனது பழைய நினைவுகளை அசை போட்டு எமோஷனலாக அன்று தான் நடித்த படங்கள் பற்றியும், ஆடிய நடனம் பற்றியும், பாடல்கள் பற்றியும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி நடிகை சிவரஞ்சனி பற்றி அவர்கள் நண்பர்களுக்கும் கூறியிருக்கிறார்கள்.

Exit mobile version