“பார்த்ததும் எச்சில் ஊரும் புடலங்காய் பச்சடி..!” – ட்ரை பண்ணி பாருங்க..!

எலும்புகளுக்கு கால்சியத்தை அள்ளித் தரக்கூடிய புடலங்காய் உடலுக்கு குளிர்ச்சியையும் தரும். எனவே இந்த கோடையில் நீங்கள் புடலங்காய் பச்சடி செய்து சாப்பிடுவதின் மூலம் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள முடியும்.

pudalangai pachadi

அப்படிப்பட்ட அருமையான இந்த புடலங்காய் பச்சடி ரெசிபி செய்ய என்னென்ன தேவை, அதை எப்படி செய்யலாம் என்பதை பற்றிய விரிவான கருத்துக்களை இந்த பதிவில் நீங்கள் படிக்க தெரிந்து கொள்ளலாம்.

புடலங்காய் பச்சடி செய்ய தேவையான பொருட்கள்

1.புடலங்காய் கால் கிலோ

2.தயிர் ஒரு கப்

3.பச்சை மிளகாய் ஐந்து

4.இஞ்சி ஒரு துண்டு

pudalangai pachadi

தாளிக்க

5.கடுகு

6.உளுத்தம் பருப்பு

7.வெந்தயம்

8.கடலைப்பருப்பு

9.வரமிளகாய்

10.பெருங்காயத்தூள்

11.மஞ்சத்தூள்

12.தேவையான அளவு உப்பு

செய்முறை

முதலில் புடலங்காயை நன்கு கழுவி அதன் மேல் இருக்கும் சாம்பல் நிறப் பகுதியை நன்கு தேய்த்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு இதனை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

pudalangai pachadi

பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து எடுத்து தனியாக ஒரு பவுலில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதன் பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து சிறிதளவு எண்ணெயை ஊற்றி அதன் கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம், உளுத்தம் பருப்பு, வர மிளகாய் போட்டு வெடிக்க விடவும். இது வெடித்த பிறகு கருவேப்பிலை, பெருங்காயத்தூளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

pudalangai pachadi

இதனை அடுத்து நீங்கள் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் புடலங்காயை சேர்த்து வதக்கி விடுங்கள். இந்த காயில் நீர் சத்து அதிகம் இருப்பதால் இதிலிருந்து வெளிவரும் நீரே வேக போதுமானதாக இருக்கும். புடலங்காய் வேகும் சமயத்தில் நீங்கள் உப்பு மற்றும் மஞ்சத்தூளை சேர்த்து மிளகாய் மற்றும் இஞ்சி அரைத்த விழுதினை சேர்த்து நன்கு கிளறி 5 நிமிடங்கள் மூடி விடுங்கள்.

இதன் பிறகு அடுப்பினை அணைத்துவிட்டு இந்த கலவை ஆறிய பிறகு மற்றொரு பாத்திரத்தில்  போட்டு தேவையான அளவு தயிர் ஐ சேர்த்து விடுங்கள்.உப்பு தேவையா என்று பார்த்துவிட்டு உப்பு தேவையானில் சிறிதளவு போட்டுக் கொள்ளலாம்.

இப்போது மனம் மணக்கும் அனைவரும் விரும்பி சுவைக்க கூடிய புடலங்காய் பச்சடி தயாராக உள்ளது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

பகலில் மாஸ்டர் இரவில் கொடூரன்.. படியாத பெண்களை மிரட்டி சூறையாடிய ஜானி!! 21 வயது பெண் பட்ட கொடுமைகள்..

கேரளாவில் ஹேமா கமிஷன் வெளிவந்து இந்தியாவில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த சூடு தனியாக முன்பே …

Exit mobile version