சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் புன்னகையரசி சினேகா குதுகலம்..! – வைரல் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் புன்னகையரசி என்று வர்ணிக்கப்படும் நடிகை சினேகா நீச்சலுடையில் தனது குழந்தைகளுடன் குதூகலமாக விளையாடும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரை படத்தில் ஹீரோயினாக நடிக்கும் பொழுது அந்த படத்தில் ஹீரோவாக நடித்த நடிகர் பிரசன்னாவுடன் காதல் வயப்பட்டு அவரையே திருமணமும் செய்து கொண்டார் நடிகை சினேகா.

சினேகாவிடம் சமீபத்தில் இவருடைய காதல் பற்றிய சுவாரசியமான ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. எத்தனையோ பேருடன் நீங்கள் பணியாற்றி இருக்கிறீர்கள் ஆனால் பிரசன்னாவுடன் காதல் வயப்பட்ட அதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த நடிகை சினேகா, பிரசன்னாவை காதலித்தது.. அதற்கு காரணம் என்று கேட்டால்.. எதுவும் கிடையாது. காதலுக்கு என்ன காரணம் சொல்ல முடியும்..? குறிப்பிட்ட காரணம் எதுவும் கிடையாது. ஆனால் பிரசன்னாவிடம் ஒரு நல்ல குணம் என்னை மிகவும் கவர்ந்தது என்று கூறலாம்.

பொதுவாக சினிமாவில் அறிமுகமாகும் போது நடிகைகள் மற்றும் நடிகர்கள் தன்மையாக, எளிமையாக இருப்பார்கள், பேசுவார்கள், நடந்து கொள்வார்கள். ஆனால் அவர்களுடைய சில படங்கள் வெற்றி பெற்ற பிறகு அதிக சம்பளம் வாங்கக்கூடிய நடிகர் நடிகைகள் ஆக மாறும் பொழுது அவர்களுடைய பேச்சு, பழகும் தன்மை, நடந்து கொள்ளும் விதம், இவை எல்லாம் அப்படியே உல்டாவாக மாறி விடுவதை நான் கண்கூடாக பார்த்திருக்கிறேன்.

எப்படி இப்படி மாறினார்கள் என்று பல நேரம் யோசித்ததுண்டு. அப்படி பணம் புகழ் வந்த பிறகு தன்னுடைய தன்மையை மாற்றிக் கொள்ளும் நபர்களை கண்டாலே எனக்கு பிடிக்காது. ஆனால், பிரசன்னாவிடம் நான் இந்த குணத்தை பார்க்கவில்லை. ஆரம்பத்தில் என்னை பார்க்கும் போது அவர் எப்படி இருந்தாரோ எப்படி பழகினாரோ எப்படி பேசினாரோ அதேபோலத்தான் அவர் பிரபல நடிகரான பிறகு நிறைய சம்பாதித்த பிறகு தன்னுடைய தன்மையை குணத்தை மாற்றிக் கொள்ளாமல் ஆரம்பத்தில் பார்த்தது போலவே இருந்தார்.

அதை பார்த்து எனக்கு வியப்பாக இருந்தது. இதுதான் பிரசன்னாவை காதலிக்க காரணமா..? என்று கேட்டால்.. இல்லை, காதலுக்கு யாராலும் காரணம் சொல்ல முடியாது என்றுதான் நினைக்கின்றேன். ஆனால் பிரசன்னாவிடம் இந்த குணம் எனக்கு மிகவும் பிடித்தது என்று தன்னுடைய காதல் கணவர் மீதான பார்வையை நடிகை சினேகா கூறியிருந்தார்.

தற்பொழுது இரண்டு குழந்தைகளுக்கு தாயாகவும் இருக்கும் நடிகை சினேகா மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது தன்னுடைய குழந்தைகளுடன் நீச்சல் குளத்தில் குதூகலமாக இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …