ஒரு காலத்தில் தமிழக சினிமா ரசிகர்களின் பேவரைட் நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா. தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தொடர்ந்து தோல்விப் படங்களில் கொடுத்ததால் இவரை சினிமாவை விட்டு ஓரங்கட்டி வைத்து விட்டார்கள் என்றுதான் கூறவேண்டும். மட்டுமில்லாமல் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், கவர்ச்சி காட்டினால் தான் பட வாய்ப்பு கிடைக்கும் என்றால் அந்த பட வாய்ப்பு எனக்கு வேண்டாம் என்று விடாப்பிடியாக இருந்தார் நடிகை ஸ்ரீதிவ்யா.
இந்நிலையில் நடிகை ஸ்ரீதிவ்யா கோவில் நம்ப முடியாத தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது வெப்சீரிட் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியுள்ள நடிகை ஸ்ரீதிவ்யா நீச்சல் உடையில் சில காட்சிகளில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இது குறித்து ஸ்ரீதிவ்யா தரப்பிலிருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
கடந்த 1993-ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்த இவர் தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். கடைசியாக சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படத்தில் சுவேதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ஸ்ரீதிவ்யா.
தொடர்ந்து எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. இதருக்கு காரணமாக இன்னொரு விஷயமும் கோடம்பாக்கத்தில் அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது. அது வதந்தியா..? உண்மையா..? என்பது இது என்று எதுவும் தெரியவில்லை.
அதாவது பிரபல அரசியல்வாதியின் மகன் ஒருவர் ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்தில் ஸ்ரீதிவ்யாவை ஹீரோயினாக நடிக்க கேட்டதாகவும் ஆனால் அவர் கண்டிப்பாக நடிக்க முடியாது என மறுத்து விட்டதாகவும் இதனால் கடுப்பான அந்த அரசியல்வாதியின் மகன் நடிகை ஸ்ரீதிவ்யாவின் சினிமா வாழ்க்கையை அஸ்தமனம் செய்துவிட்டார் என்ற பேச்சுகளை கோடம்பாக்கத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கேட்க முடிகிறது.
இந்நிலையில் மலையாளத்தில் ஜனகனமன என்ற ஒரு திரைப்படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ஸ்ரீதிவ்யா அந்த படத்தில் படுக்கை அறை காட்சியில் நடித்து உள்ளார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.