Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Actress

கழட்டி விடப்பார்த்த கார்த்திக்..! அடித்து துவைத்த ஸ்ரீப்ரியா..! நடந்தது என்ன..?

தமிழ் சினிமாவில் சில நேரங்களில் காதல் கதைகள் மோசமான முடிவுகளை கொண்டு இருப்பதும் உண்டு. தமிழ் சினிமாவில் ஜெமினி கணேசனுக்கு பிறகு காதல் மன்னன் என்று அழைக்கப்பட்டவர் நடிகர் கமல்ஹாசன்.

கமல்ஹாசனுக்கு பிறகு அதே பெயரை பெற்றவர் நடிகர் கார்த்திக் என்று கூறப்படுகிறது. கார்த்திக் இளமை காலங்களில் அவர் நடிக்கும் திரைப்படங்களில் எல்லாம் யார் கதாநாயகியாக இருக்கிறார்களோ அவர்களை காதலிப்பதையே வேலையாக கொண்டிருப்பார் என்று கூறப்படுகிறது.

அப்படியாக அவர் செய்த காதல் பிறகு மிகப் பெரும் வினையாக முடிந்த சம்பவமும் நடந்திருக்கிறது. பல திரைப்படங்களில் நடிக்கும் பொழுது கதாநாயகிகளை காதலிப்பது போலவே நடிகை ஸ்ரீபிரியாவையும் கார்த்திக் காதலித்து வந்துள்ளார்.

ஸ்ரீ ப்ரியாவின் காதல்:

ஆனால் கார்த்திகை ஸ்ரீபிரியா மிக ஆழமாக காதலித்து வந்துள்ளார் இதற்கு நடுவில் தான் சோலைக்குயில் என்கிற திரைப்படத்தில் கார்த்திக் நடித்துள்ளார். அந்த திரைப்படத்தில் நடிக்கும் போது அந்த திரைப்படத்தில் அறிமுக கதாநாயகியாக வந்த ராகினி மீது கார்த்திக்கிற்கு எக்கச்சக்கமான காதல் உண்டானது.

---- Advertisement ----

மற்ற பெண்களை காதலிக்கும் போது பாதியிலேயே கழட்டி விட்டு விடும் கார்த்திக் ராகினியை மட்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தார். படப்பிடிப்பு துவங்கியது முதலே ராகிணியுடன் தொடர்ந்து ஈடுபாட்டோடு இருந்து வந்தார் கார்த்திக்.

ஏமாற்றிய கார்த்திக்:

பல நேரங்களில் ராகினிக்கு பிடித்த விஷயங்களை செய்வதே கார்த்திக் படப்பிடிப்பில் வேலையாக வைத்திருந்தார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் படபிடிப்பு முடிந்த பிறகு இவர்கள் இருவருமே திருமணம் செய்து கொண்டனர்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பிறகு ஸ்ரீப் ரியாவால் அதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. இதனை அடுத்து கார்த்திக்கை பலி வாங்க வேண்டும் என்பது ஸ்ரீபிரியாவின் எண்ணமாக இருந்தது. இந்த நிலையில் சோலைக்குயில் திரைப்படத்தின் டப்பிங் வேலைகளுக்காக கார்த்திக்கும் ராகினியும் ஏ.வி.எம் ஸ்டுடியோவிற்கு வந்திருக்கின்றனர் என்கிற விஷயம் ஸ்ரீபிரியாவுக்கு தெரிந்தது.

உடனே அவர் தனது காரை வேகமாக எடுத்துக் கொண்டு ஏ.வி.எம் ஸ்டுடியோவிற்கு வந்தார் டப்பிங் ஸ்டுடியோவில் வைத்து கார்த்திக் மற்றும் ராகினி இருவரையும் தாக்கி இருக்கிறார் ஸ்ரீ பிரியா.

பிறகு ஒரு தனியறைக்கு சென்று கதவை சாத்தி கொண்டார். பலரும் கதவை தட்டியும் ஸ்ரீ பிரியா திறக்கவில்லை பிறகு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த பொழுது அவர் விஷத்தை குடித்துவிட்டு மயக்கம் அடைந்து கிடந்தார். அதன் பிறகு அவரை மருத்துவமனையில் சேர்த்து உயிரை காப்பாற்றி இருக்கின்றனர். அந்த அளவிற்கு ஸ்ரீபிரியா நிஜமாக கார்த்திக்கை காதலித்து இருந்ததால் அது இவ்வளவு பெரிய பிரச்சனையில் சென்று முடிந்திருக்கிறது.

Continue Reading

More in Actress

Trending

To Top