பிரபல கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப் திரைப்படம் இந்தியா முழுக்க மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஒரு புது ட்ரெண்டை இந்த படம் உருவாகி கொடுத்திருக்கிறது. படத்தின் திரைக்கதை வலுவாக இருக்கும் பட்சத்தில் ஹீரோ யாராக இருந்தாலும் ஹீரோயின் யாராக இருந்தாலும் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்கள் அந்த படத்தை தூக்கி நிறுத்தி அந்த படத்திற்கு வசூலை வாரி வழங்குவார்கள்.
அந்த படத்திற்கு மிகுந்த வரவேற்பு கொடுப்பார்கள் என்பதற்கு சாட்சியாக இருக்கிறது இந்த திரைப்படம் அமைந்தது. முன்னதாக இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படம் இதே மாதிரியான வரவேற்பை பெற்றிருந்தாலும் கூட ராஜமௌலி என்ற ஒரு தனி இயக்குனருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுக்க இருக்கிறது.
ஆனால் கேஜிஎப் திரைப்படத்தை இயக்கிய பிரஷாந்த் நீல்-க்கு சொல்லிக்கொள்ளும்படி அடையாளம் கிடையாது. கே.ஜி.எஃப் திரைப்படம் தான் அவருக்கு புதிய அடையாளத்தை பெற்று கொடுத்தது. எனவே புதுமுக இயக்குனர், புதுமுக நடிகர், புதுமுக நடிகை என எந்த விஷயமும் ஒரு படத்தின் வெற்றியை தடுக்கக் கூடியதாக இருக்காது.
படம் தரமானதாக ரசிகர்களுக்கு பிடித்ததாக இருக்கும் பட்சத்தில் இந்தியா முழுவதும் அந்த படத்தை எந்த மொழியில் எடுத்திருந்தாலும் சரி என்று வரவேற்க இந்திய சினிமா ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அந்தந்த மொழியில் முன்னணியில் இருக்கும் கதாநாயகர்கள் நூறு கோடி ரூபாய் சம்பளம் வாங்கினால் போதும் ஏதாவது ஒரு கதை.. நாலு பாடல்கள்.. 4 சண்டைக் காட்சிகள்.. ரசிகர்களின் நரம்பை புடைக்க வைக்கும் விதமான நாலு பஞ்ச் வசனங்கள் இப்படி ஒரு கதையுடன் ஒரு படத்தில் நடித்துவிட்டு 100 கோடி வசூல் 150 கோடி வசூல் என்று மிகப்பெரிய அட்ராசிட்டி செய்துகொண்டிருக்கிறார்கள்.
நிஜமாகவே சினிமாவை நேசிக்கக் கூடிய ஒரு ரசிகர் இப்படியான அட்ராசிட்டிகளை விரும்பமாட்டார்கள். படம் தரமானதாக இருக்கிறதா..? ஒரு மூன்று மணி நேரம் தங்களுடைய நிலையை மறந்து அந்தப் படத்தோடு கலந்து இருக்கிறோமா..? என்பதுதான் விஷயம்.
ஆனால் குறிப்பிட்ட அளவு ரசிகர் பட்டாளத்தை வைத்துக் கொண்டு இன்றைய நடிகர்கள் ஆடக்கூடிய ஆட்டங்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அப்படியே அவர்கள் அரசியலுக்கு வந்து நாட்டை காப்பாற்றுவார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கின்றோம். இது எந்த அளவுக்கு மோசமான மனநிலை என்று நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.
அந்த வகையில் கேஜிஎப் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி இந்த படத்தின் மூலம்தான் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். என்றாலும் கூட தமிழில் நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான ஒரு திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மாடல் அழகியான இவர் பல அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார். மாடலிங் துறையில் அதிக ஈடுபாடு இவருக்கு விளம்பர பட வாய்ப்புகள் வந்தது.
அந்த வகையில், கே.ஜி.எஃப் இயக்குனர் பிரஷாந்த் நீல்-லின் கவனத்திற்கு வந்த நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கே.ஜி.எஃப் திரைப்படத்தில் ஹீரோயினாகவும் வாய்ப்பைப் பெற்றார்.
இந்நிலையில், இளம் வயதில் தன்னுடைய மாடலிங் செய்த காலத்தில் நீச்சலுடையில் குலுங்க குலுங்க நடை போட்ட இவரது வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.