Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

நடிகை கஸ்தூரி அசிங்கமான சாவு… நிச்சயம் உனக்கு.. போட்டு தாக்கிய சினிமா பிரபலம்..!

வானொலி தொகுப்பாளனியாக தனது கெரியரை துவங்கியவர் தான் சுசித்ரா. ஆர் ஜே வாக இவர் பெரும் புகழ்பெற்றவர் ஆக பார்க்கப்பட்டு வந்தார்.

இதனிடையே தமிழ் திரைப்படங்களுக்கு பாடல் பாடியும் பின்னணி பாடகியாக பெரும் புகழ்பெற்றிருந்தார். இவரது மெல்லிய குரல் ரசிகர்களின் மனதை கவர்ந்தது.

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி பிரபலமான பாடகியாக இருந்து வந்தார்.

நடிகை கஸ்தூரி:

இதனிடையே திரைப்படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்தார். இப்படியான சமயத்தில் இவர் கார்த்திக் குமார் என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .

ஆனால் திருமணம் ஆன சில வருடங்களே இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள்.

இந்நிலையில் பல வருடங்கள் கழித்து தனது காதல் கணவரை ஏன் பிரிந்தேன் மற்றும் சுச்சி விவகாரத்தில் தான் எப்படி மாட்டிக்கொண்டேன் என்பது குறித்த பல விஷயங்களை வெளிப்படையாக தெரிவித்தார்.

அதுமட்டுமில்லாமல் எனக்கு திருமணம் ஆகி இரண்டு வருடத்திலேயே என்னுடைய கணவர் கார்த்திக் ஓரினச்சேர்க்கையாளர் என்பது எனக்கு தெரியவந்தது.

அது மட்டுமில்லாமல் அவர் தனுஷ் உடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு இருக்கிறார் என கூறியிருந்தார். தனுஷ் மிக மோசமானவர் தனுஷ் பல நடிகைகளுடன் அந்தரங்க உறவில் இருந்திருக்கிறார் எனக்கூறி பகீர் இருந்தார் நடிகை சுசித்ரா.

பாடகி சுசித்ரா:

அது மட்டும் இல்லாமல் திரிஷா , ஆண்ட்ரியா , நடிகை வனிதா,சரத்குமார், ராதாரவி, நயன்தாரா இப்படி பல பிரபலங்களை குறித்து அதிர்ச்சிகரமான விஷயங்களை கூறியிருந்தார் சுசித்ரா.

இந்த விவகாரம் பெறும் பூதாகரத்தை கிளப்பியதை அடுத்து சுசித்ராவின் இந்த பேட்டி கடந்த சில நாட்களாக தீயாய் பரவி வைரலாக பேசப்பட்டது.

சுசித்ராவின் இந்த பேட்டியை பார்த்த பிரபல சர்ச்சைக்குரிய நடிகையான கஸ்தூரி… சுசித்ரா இப்போ மிகவும் மனம் உடைந்த நிலையில் இருக்கிறார் .

அவருக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. சிதைந்த ஒரு உள்ளம் உதவிக்காக கூக்குரல் இடுவது எனக்கு கேட்கிறது .

சுசித்ராவிற்கு உடனடியாக உதவி தேவைப்படுகிறது. மருத்துவ உதவியோ அல்லது மனநல உதவியோ ஏதோ ஒன்று அவருக்கு தேவை .

அது மட்டும் இல்லாமல் அவருடைய அம்மாவும் அப்பாவும் இரண்டு பேருமே தற்கொலை செய்து கொண்டார்கள் .

மனநலம் பாதிக்கப்பட்டவர் சுசித்ரா:

இதனால் சுசித்ராவுக்கு சிறுவயதிலிருந்தே சரியான வழிகாட்டுதல் இல்லாததால் அவர் இந்த மாதிரி வளர்ந்து விட்டார் என அனுதாபம் தெரிவிக்கும் வகையில் கஸ்தூரி பேசியிருக்கிறார்.

கஸ்தூரியின் இந்த பேட்டிக்கு கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து பதிலடி கொடுத்திருக்கும் சுசித்ரா, என்னுடைய அம்மா அப்பா தற்கொலை செய்து கொண்டார்கள் என்று எப்படி சொல்லுற? உனக்கு என்ன தெரியும்?

என்னுடைய அம்மா விபத்து ஒன்றில் இறந்துவிட்டார். என்னுடைய அம்மாவை பற்றி தப்பாக பேச உனக்கு அருகதையே இல்லை .

உனக்கு அசிங்கமான சாவுதான் வரப்போகிறது. உன்னை கெட்ட வார்த்தையில் திட்டலாம் என நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

உனக்கெல்லாம் மரியாதையே கிடையாது… வனிதா, பயில்வானனை கூட வாங்க போங்க என்று பேசுவேன். ஆனால், உன்னை மட்டும் நீ… போ என்று தான் பேசுவேன் .

கஸ்தூரிக்கு சுசித்ரா பதிலடி:

அந்த அளவுக்கு கீழத்தரமான பொம்பளை நீ.. நீ ஒரு செத்த காக்கா போ டீ…என மிகவும் மோசமாக தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் சுசித்ரா.

அதுமட்டுமில்லாமல் என்னுடைய அப்பா அம்மாவ பத்தி பேச உனக்கு எந்த ஒரு தகுதியும் இல்லை. கஸ்தூரி திரும்பவும் நீ ஸ்கூலுக்கு போய் மாரல் சைஸ் கிளாஸ் அட்டென்ட் பண்ணு என்று கஸ்தூரியை கடுமையான வார்த்தையால் திட்டி தீர்த்துள்ளார் சுசித்ரா. அவரின் இந்த பேட்டி பூதாகரத்தை கிளம்பி இருக்கிறது.

90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த கஸ்தூரி சமீப நாட்களாக சர்ச்சைக்குரிய நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக சினிமாவில் வலம் வந்தார் .

1992ல் மிஸ் மெட்ராஸ் அழகி போட்டியில் பட்டம் பெற்றிருக்கிறார். அதன் மூலம் தான் இவருக்கு திரைப்படத்துறையில் நடிக்கும் வாய்ப்பே கிடைத்தது.

நடிகை கஸ்தூரி:

முதல் முதலில் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த ஆத்தா உன் கோயிலிலே படத்தில் நடித்திருந்தார். அதை எடுத்து ராசாத்தி வரும் நாள், சின்னவர், அமைதிப்படை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

இதனிடையே கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பெரும் புகழ்பெற்றார் கஸ்தூரி.

இதற்கிடையில் தனது சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது சமூக நலன் சார்ந்த அரசியல் மற்றும் திரைப்படத்துறை உள்ளிட்டவற்றில் தன்னுடைய கருத்துக்களை சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டதன் மூலமாக “ட்விட்டர் கஸ்தூரி” என அழைக்கப்பட்டு வந்தார். இதன் மூலம் அவர் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகியது குறிப்பிடுத்தக்கது.

Continue Reading

More in Tamil Cinema News

Trending

To Top
Exit mobile version