Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

சுசித்ரா பேச்சில் இதை கவனிச்சீங்களா..? குண்டை தூக்கி போட்ட செய்யார் பாலு..!

பாடகி சுசித்ரா ஒவ்வொரு நாளும் வெளியிடுகின்ற இணைய பதிவுகள், அவரது பேட்டிகளில் அவர் அடைந்த துன்பம், மனவலி அப்பட்டமாக வெளியே தெரிவதோடு அவரது பேச்சில் ஒரு விதமான வலி உள்ளது என செய்யாறு பாலு தனது புதிய வீடியோவில் பேசி இருப்பது மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

ஆரம்ப காலங்களில் வானொலியில் ஆர்ஜே-வாக பணிபுரிந்ததை அடுத்து திரைப்படங்களில் பாடக்கூடிய வாய்ப்பு கிடைத்த பாடகி சுசித்ரா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 கலந்து கொண்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

பாடகி சுசித்ரா பேச்சு..

அது மட்டுமல்லாமல் சுபித்ரா மனநலம் பாதிக்கப்பட்டவர் என பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட வீடியோவில் சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் பேசுவதாக வெளி வந்த ஆடியோவும் மக்கள் மத்தியில் பரபரப்பானது.

இந்நிலையில் அந்த ஆடியோ தன்னுடைய ஆடியோ அல்ல. அது முற்றிலும் தவறான ஒன்று என கார்த்திக் குமார் வீடியோவை வெளியிட்டதை அடுத்து பயில்வான் ரங்கநாதன் சொல்வது பொய்யாக இருக்க வேண்டும் என்ற ரீதியில் கார்த்திக் குமார் பொய் சொன்னாரா? அல்லது பயில்வான் பொய் சொன்னாரா? பட்டிமன்றம் நடைபெற்று வருகிறது.

---- Advertisement ----

தமிழ் திரைப்பட உலகை புரட்டிப் போடக்கூடிய அளவு பாடகி சுசித்ரா அளித்து வரக்கூடிய பேட்டிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவரையும் யோசிக்க வைத்துள்ளது.

பல திரைப்பட பிரபலங்களின் தலைகள் உருண்டு வருகின்ற வேளையில் சுசித்ராவை வைத்து தனுஷ் பிராங் செய்தாரா? என்ற விஷயங்களும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

அந்த வகையில் தான் போதைப் பொருளைப் பயன்படுத்திய தனுஷ் மற்றும் அவரது நட்பில் இருந்தவர்கள் சுசித்ராவை பிராங்க் செய்ய கார்த்திகா குமாரை வைத்து சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் வெளியிட்ட திரை பிரபலங்களின் அந்தரங்க போட்டோக்கள் சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் வெளியானது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

சுசித்ரா சொல்வதைப் போல ஒரு வேலை அவரை பிராங்க் செய்து இந்த படங்கள் வெளி வந்திருக்கலாம் என்று செய்யாறு பாலு பகீர் செய்தியை கூறியிருக்கிறார்.

மேலும் தன் பக்கம் இருக்கும் நியாயத்தை வெளிப்படுத்த துடித்துக் கொண்டிருக்கும் சுகித்ராவிற்கு மனநலம் பாதிக்கப்பட்டவர் என்ற பட்டத்தை கட்டி இருக்கலாம்.

இத கவனிச்சீங்களா?

அத்தோடு இந்த சுச்சி லீக்ஸ் மூலம் வெளி வந்த புகைப்படத்தால் எந்த பிரபலங்களுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அத்துடன் சுஜித்ராவிற்கு தாலி கட்டிய கணவரால் குழந்தை கொடுக்க முடியவில்லை.

எனவே 12 ஆண்டுகள் போராடி விவாகரத்து பெற்றிருக்கும் சுசித்ரா சொல்லும் பேச்சில் வலி தெரிவதாக செய்யாறு பாலு சுசித்ராவிற்கு ஆதரவாக வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

இந்நிலையில் தன் வாழ்க்கையை நாசம் செய்ததாக சொல்லி பல்வேறு விதமான செய்திகளை வெளியிட்டு வரும் பாடகி சுசித்ராவிற்கு எதிராக யாரும் ஏன் வழக்கு தொடரவில்லை என்ற கேள்வியை செய்யார் பாலு முன் வைத்திருக்கிறார்.

அத்தோடு நடிகர் தனுஷ், சிம்பு, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், திரிஷா, சங்கீதா, கிரிஷ் கார்த்திக் குமார் என பலரது பெயர்களை வெளிப்படையாக சொல்லி வரக்கூடிய நிலையில் சினிமா துறையைச் சார்ந்த எவரும் இதற்கு கண்டனத்தை ஏன் தெரிவிக்கவில்லை.

குண்டை தூக்கி போட்ட செய்யாறு பாலு..

பல வருடங்களுக்கு முன்பு நடந்த இந்த பிரச்சனையை ஏன் மீண்டும், மீண்டும் இவர் பேசி வருகிறார். இதன் உள்நோக்கம் என்ன என்று தெரியவில்லை.

எனினும் அனைவரும் சற்று யோசித்துப் பார்த்தால் கார்த்திக் குமாரால் பாடகி சுசித்ரா மிகவும் பாதிப்படைந்து இருப்பதோடு மட்டுமல்லாமல் தன் கணவர் ஓரினச்சேர்க்கையாளர் என தொடர்ந்து சொல்வதில் உண்மை இருக்க வாய்ப்பு உள்ளது என செய்யார் பாலு, பாடகி சுசித்ராவிற்கு ஆதரவாக பேசி வருவது பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.

Continue Reading

More in Tamil Cinema News

Trending

To Top