விபச்சார வழக்கில் சிக்கிய 24 வயசு நடிகை..! – கஸ்டமர் போல நுழைந்து ‘லபக்’கிய போலீஸ்..!

பிரபலமான போஜ்புரி நடிகை சுமன் குமாரி,(Suman Kumari) விபசார வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது, பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இன்றைய காலகட்டத்தில் மனித வாழ்க்கையில், பணம் என்பது, சுவாசிக்கும் மூச்சுக்காற்றை போல, மிக மிக தேவையானதாக மாறிவிட்டது.

நுகர்வு கலாச்சாரம் பெருகிவிட்ட சூழலில், எந்நேரமும் மனித தேவைகள் பெருகி, பெருகி எவ்வளவு பணம் இருந்தாலும் மனிதர்களள் சளைக்காமல் செலவழிக்கும் ஒரு மனநிலைக்கு மாறிவிட்டனர். அதனால், அழகான மாடலிங் பெண்களை குறிவைத்து அவர்களது வறுமையை, பணத் தேவைகளை அறிந்துகொண்டு டீல் பேசி, அவர்களை விபசாரத் தொழிலில் ஈடுபடுத்திய நடிகை சுமன் குமாரி என்பவர், மும்பையில் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுமன் குமாரி
Suman Kumari

மும்பையில் உள்ள ஆரே காலனியில், ராயல் பாம் என்ற ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இங்கு போஜ்புரி நடிகை சுமன் குமாரி, புரோக்கராக செயல்பட்டு, மாடலிங் அழகிகள் சிலரை வைத்து விபசார தொழிலை, சிறப்பாக நடத்தி வந்திருக்கிறார்.

ஆடம்பர வாழ்வை விரும்பும் பணத்தின் தேவைஅதிகமாக உள்ள மாடலிங் பெண்கள், வறுமையில் சிரமப்படும் மாடலிங் பெண்கள் ஆகியோரை குறிவைத்து, அவர்களிடம் டீல் பேசி சம்மதிக்க வைக்கும் சுமன் குமாரி, 50 ஆயிரம் ரூபாய் முதல் 80 ஆயிரம் வரை ரேட் பேசி, அவர்களை சம்மதிக்க வைத்து, தொழிலுக்குள் கொண்டு வந்துவிடுவது வழக்கம்.

சுமன் குமாரி
Suman Kumari

இதுபற்றி அரசல் புரசலாக தகவல் அறிந்தும், போலீசாருக்கு தெரியாமல், தொழிலை ரகசியமாக ‘திறம்பட’ நடத்திய சுமன் குமாரியை, போலீசார் பொறி வைத்து பிடிக்க திட்டமிட்டனர். அதன்படி, போலீசாரே, செட்டப் செய்து, கஸ்டமர்களை போல சிலரை அனுப்பி, சுமன்குமாரி அவர்களிடம் பணம் வசூலித்துக்கொண்டிருந்த நேரத்தில், திடீரென ஓட்டலுக்குள் நுழைந்து, கையும் களவுமாக பிடித்திருக்கின்றனர்.

சுமன் குமாரியை கைது செய்த போலீசார் அப்போது, அங்கிருந்த 3 மாடல் அழகிகளையும் மீட்டிருக்கின்றனர். ஆறு ஆண்டுகளாக, மும்பையில் இருந்துவரும் சுமன் குமாரி, எத்தனை ஆண்டுகளாக தொழில் செய்தார்? இதில் பின்னணியில் இருந்து அவருக்கு உதவிய முக்கிய நபர்கள் யார் என்பது குறித்தும் சுமன் குமாரியிடம் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

சுமன் குமாரி
Suman Kumari

இதில் ஆச்சரியம் தரும் விஷயம் என்னவென்றால், விபசாரத்தில் மாடலிங் பெண்களை ஈடுபடுத்திய நடிகை சுமன் குமாரிக்கு, வயது 24 என்பதுதான். இந்த இளம் வயதில், ஆடம்பரமான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, மிக மோசமான நடவடிக்கையில் ஈடுபட்டு, இன்று அசிங்கப்பட்டிருக்கிறார்.

இவர் சினிமாவில், டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வரும் நிலையில், பணம் சம்பாதிக்க நல்ல வாய்ப்புகள் இருந்தும், குறுகிய காலத்தில் அதிக வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, 24 வயதிலேயே களங்கப்பட்ட பெண்ணாக, கைது செய்யப்பட்டிருப்பது, பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுமன் குமாரி
Suman Kumari

இதே போல், மும்பையில் உள்ள ஓட்டலில் போலீசார் நடத்திய ரெய்டில், அங்கு விபசாரத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் பிடிபட்டு இருக்கின்றனர். அவர்கள் மார்க்கெட் இழந்த, படவாய்ப்புகள் இல்லாத தமிழ் சினிமா நடிகைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த ஓட்டல் உரிமையாளரே, புரோக்கராக செயல்பட்டிருக்கிறார். அந்த நடிகைகள் இந்தி படங்களிலும் நடித்த முன்னாள் நடிகைகள். குடும்பம் நடத்தக்கூட வசதியற்ற நிலையில், இந்த தொழிலுக்கு வந்துவிட்டதாக விசாரணையில் போலீசாரிடம் அந்த நடிகைகள் கூறியதால், அவர்களது பெயர்களை வெளியிட, போலீசார் மறுத்துள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, இப்போது நடிகை சுமன்குமாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version