இந்த மாதிரி படங்களில் நடித்து இந்திய இளைஞர்கள் மத்தியில் பிரபலமான நடிகை சன்னிலியோன் சமீபகாலமாக அந்த மாதிரியான படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டு சினிமாவில் நடித்து வருகின்றார்.
ஒரு கட்டத்திற்கு மேல் அப்படியான படங்களில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லாமல் போய்விட்டது என்றும் ஆரம்பத்தில் இருந்த ஒரு வேகம், இளமைத் துடிப்பு போன்றவை என்னை அந்த படங்களில் நடிக்கும் அளவிற்கு இழுத்துச் சென்றது.
ஆனால் ஒரு கட்டத்தில் எனக்கு என் மீது ஒருவிதமான வெறுப்பு தோன்ற ஆரம்பித்தது அதன் காரணமாக அப்படியான படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு தற்போது சினிமாவில் நடித்து வருகிறேன் என்கிறார் நடிகை சன்னிலியோன்.
தவிர தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார் தன்னுடன் அந்த மாதிரியான படங்களில் நடித்த ஒருவரையே திருமணம் செய்து கொண்ட சன்னி லியோன் தஇரண்டு குழந்தைகளை தத்தெடுத்து அவர்களை வளர்த்து வருகிறார்.
தொடர்ந்து சினிமாவில் நடித்து வரும் சன்னி லியோன் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பது வழக்கம்.
அந்த வகையில், தற்போது நீச்சல் குளத்தின் அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது தன்னுடைய மேனேஜர் சன்னி ரஜானி என்பவர் எதிர்பாராத விதமாக அவரை நீச்சல் குளத்தில் தள்ளிவிட நீச்சல் குளத்தில் இருந்தபடியே செருப்பை கொண்டு அந்த மேனேஜரை அடிக்கும் சன்னி லியோனின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.