தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் நடிகை சுரபி கல்லூரியில் படிக்கும் பொழுது மாடலிங் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.
மாடலிங் செய்து கொண்டு நடிப்பு பயிற்சியும் பெற்றார். தொடர்ந்து நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து அதன் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார்.
அதை தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி என்ற படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். முன்னதாக வேலையில்லாத பட்டதாரி படத்தில் நான்தான் ஹீரோயின் என்று நினைத்து இருந்ததாகவும் ஆனால் அமலாபால் தான் முக்கிய ஹீரோயினாக நடித்து இருந்தார் எனவும் தனது ஏமாற்றத்தை பதிவு செய்திருந்தார் சுரபி.
அதன் பிறகு ஜீவா என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தமிழில் போதிய வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். பட வாய்ப்புகளைப் பெற தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளுகிளுப்பான படங்களை பதிவு செய்து வருகிறார் சுரபி.
தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் பிங்க் நிற ஆடை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் படி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள், இது உடம்பு இல்ல.. பால்கோவா சிலை.. என்று வர்ணிக்கின்றனர்