சேலம் ஃபிகரு.. செதுக்கி வச்ச சிலை.. இணையத்தை அலற விட்ட பிக்பாஸ் சுருதி பெரியசாமி..!

பிக் பாஸ் 5 வது சீசனில் 18 போட்டியாளர்களில் உருவாக கலந்துகொண்டவர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சுருதி பெரியசாமி. மாடல் அழகியான இவர் பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்டார்.

பிக்பாஸ் போட்டி ஆரம்பத்திலிருந்து ரசிகர்களிடம் எந்த கெட்ட பெயரும் வாங்காமல் சமத்து பிள்ளையாக விளையாடி வந்த பிக்பாஸ் சுருதி ஒரு கட்டத்தில் சக போட்டியாளர் தாமரை என்பவரின் காயின் ஒன்றை திருடிய விவாகரத்தில் ரசிகர்களிடம் கெட்டபெயர் எடுத்துக்கொண்டார்.

என்னதான் டாஸ்க் என்றாலும் கூட ஒருவர் உடை மாற்றும் கேப்பில் ஆட்டைய போடுவது பொருத்தமானதாக தெரியவில்லை என்றார்கள் ரசிகர்கள். பல நாட்களாக தனக்கு கிடைத்த நல்ல பெயரை ஒரே நாளில் சுக்கு சுக்காக நொறுக்கி கொண்டார் சுருதி.

இதனால் வெளியேற்ற படலத்தில் போதுமாக வாக்குகளை பெறமுடியாமல் வெளியேற்றப்பட்டார் சுருதி. ரசிகர்களின் கடுமையான கோபத்திற்கு உள்ளான சுருதி பிக்பாஸ் வீட்டில் நிலைக்க முடியவில்லை.

இதன் பின்னர் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல்வேறு விமர்சனங்களை சந்தித்தார். ஆனால், இந்த முறை மிகவும் சாமர்த்தியமாக விளையாடி அவர்களின் கவனத்தை ஈர்த்தார். விளையாட்டு வீராங்கனையும், மாடல் அழகியான இவர் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்து படித்து முன்னேறி தற்போது மாடலிங் துறையில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கிறார்.

விளம்பரப் படங்களில் நடித்து வரும் இவர் அடிக்கடி தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை. இவருடைய சொந்த கதையை கேட்டு கண் கலங்கிய ரசிகர்களும் இருக்கிறார்கள்.

ஆனால் அதே சமயம் மாடலிங்கில் கவர்ச்சியையும் சேர்த்துக் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பினார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.