1997 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமான சூரியவம்சம் [Surya Vamsam] படத்தில் நடித்த சரத்குமார், தேவயானி, ராதிகா, பிரியா ராமன், மணிவண்ணன் போன்றவர்களுக்கு ஒரு மிகப்பெரிய பிரமாண்டமான வெற்றி திரைப்படமாக அமைந்தது.
மேலும் 90 களில் சக்கை போது போட்ட இந்த திரைப்படத்தை விக்ரமன் இயக்கியிருந்தது அனைவருக்கும் நன்றாக தெரியும். இதில் சக்திவேல் கவுண்டர், சின்னராசு ஆகிய இரண்டு கேரக்டரில் இரட்டை வேடங்களில் சரத்குமார் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
இந்த படத்தில் தன்னை அவமானப்படுத்தி காதலிப்பது போல் நடித்த பிரியா ராமனுக்கு பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் தேவயானி சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் அந்த காதலை ஏற்காத குடும்பம் அவர்களை தனியாக ஒதுக்கி விடுவார்கள்.
இதனை அடுத்து தேவயானி கலெக்டருக்கு படிக்க வேண்டும் என்ற லட்சியம் கொண்டு இருப்பார் அவருக்கு பக்கத்துணையாக சின்ன ராசு கேரக்டரில் நடித்த சரத்குமார் அற்புதமாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
மேலும் இந்த படத்தில் வெளிவந்த நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்ப்பதே என்ற பாடல் ஆனது இன்றும் பேருந்துகளில் ஓலிக்க கூடிய முக்கிய பாடல்களில் ஒன்றாக உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. 90-களில் வெளி வந்த பாடல் என்றாலும் இன்றைய இளைஞர்களும் ரசித்து கேட்கக்கூடிய வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது.
இதனை அடுத்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் சரத்குமார் மற்றும் தயாரிப்பாளர் சவுத்ரி கலந்து கொண்டதோடு அந்த பேட்டியில் சூரியவம்சம் படத்தில் இரண்டாம் பாகத்தை படப்பிடிப்பதற்கான விவாதங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் சூடான தகவல்களை கூறி இருக்கிறார்கள்.
மேலும், நடிகர் விஜய்சேதுபதி ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்ற தகவலும் கிசுகிசுக்கப்படுகின்றது. இதனை அடுத்து வெகு விரைவில் சூரியவம்சம் பார்ட் 2 படப்பிடிப்புக்கான பணிகள் தொடங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக ஏற்பட்டுள்ளது.
மேலும் கதை எப்படி இருக்கும்.? தேவயானிக்கு பதில் யார் நடிப்பார்கள் என்பது போன்ற கேள்விகள் இப்போது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருப்பதால் விரைவில் இதற்கான விடையை சவுத்ரி அளிப்பாரா.? என்பதை பொறுத்திருந்து நாம் பார்க்க வேண்டும்.
எனவே விரைவில் சூரியவம்சம் பார்ட் 2 படத்தை நீங்கள் திரையரங்குகளில் பார்க்கலாம்.