தமிழ் திரை உலகில் அந்தக் காலத்திலும் சில அத்துமீறல்கள் நடந்துள்ளது அவை மீடியாக்கள் அதிகளவு அன்று இல்லாத காரணத்தால் பெரிய அளவு வெளியே தெரியவில்லை என்று சொல்லலாம்
அந்த வகையில் தற்போது தமிழ் சினிமா ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சில விஷயங்களை திரைப்பட விமர்சகர் டாக்டர் காந்தராஜ் விளக்கமாக அண்மை பேட்டியில் பேசி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறார். அது பற்றிய விரிவான விவரங்களை எந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
நீச்சல் காட்சியில் அப்பா முன்னாடியே மகளை வற்புறுத்திய இயக்குனர்..
ஜெயலலிதா மற்றும் முத்துராமன் நடித்த திரைப்படமான சூரியகாந்தி படத்தைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள் இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படங்களில் ஒன்றாக இருந்தது.
இந்தப் படத்தில் இவர்கள் இருவரும் நடிக்கும்போது புதுமுக நடிகை ஒருவரையும் போட்டு இருந்தார்கள். அந்தப் பெண்ணை நீச்சல் காட்சியில் நடிக்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கேமராவில் அதை ஷூட் செய்வதற்கு அனைத்தையும் தயார் செய்து விட்டார்கள்.
இதனை அடுத்து அந்த நீச்சல் உடையை பார்த்த அந்த அறிமுக நடிகை அந்த உடையை போட மறுத்து போட மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார். இந்த சூழ்நிலையில் அந்தப் பெண்ணின் அப்பாவும் அவர் அருகிலேயே தான் அமர்ந்திருந்தார்.
இந்நிலையில் அந்தப் பெண் அந்த காட்சிகள் நடிக்க மறுத்ததை அடுத்து கம்பல் செய்து நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தி இருக்கிறார்கள்.
உண்மையை உடைத்த பிரபலம்..
எனினும் அதை அந்த அறிமுக நடிகை விரும்பாததை அடுத்து அவரது அப்பா என்ன செய்தார் தெரியுமா அருகில் இருந்த ஒரு கல்லை எடுத்து கேமராவை வீசி எறிந்து கேமராவை உடைத்து விட்டார் என்ற உண்மையை டாக்டர் காந்தராஜ் கூறியிருக்கிறார்.
அந்தப் படத்தில் மனோரமா பாடுகின்ற காட்சியில் ஒரே இடத்தில் மட்டும் தான் அந்த பெண் வருவார் என்ற தகவலையும் கூறி இருக்கிறார். மேலும் அந்த காட்சியை தன் மகளை நடிக்க விடாமல் ஆழ்ந்த இடத்தை விட்டு கூட்டி வெளியே சென்று விட்டார்.
எனவே அட்ஜஸ்ட்மென்ட் என்பது கட்டாயம் ஆனது அல்ல படத்தில் நடிப்பதற்கும் நிரந்தரமான ஒரு இடத்தை மக்கள் மத்தியில் பிரிப்பதற்கும் பணத்தை அதிக அளவு சம்பாதிப்பதற்கும் தான் உயர்ந்த விஷயத்திற்கு நடிகைகள் உடன்பட்டு செல்கிறார்கள்.
எனவே இந்த விஷயத்தில் நடிகைகளும் தங்களது பேரும் பங்கை வகித்து இருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள வேண்டும். எனவேதான் இதனை அட்ஜஸ்ட்மென்ட் என்ற பெயரில் அழைக்கிறார்கள் என்பதை போடகமாக டாக்டர் காந்தராஜ் சொல்லிவிட்டார்.