நைட்டெல்லாம் அழுதேன்… கேவலமா இருந்துச்சி.. கண்ணீர் விட்டு அழுத மணிமேகலை.. அடக்கொடுமையே.!
கடந்த இரண்டு நாட்களாகவே சமூக வலைதளங்களில் மணிமேகலை என்கிற பெயர்தான் அதிக வைரல் ஆகி வந்துகொண்டு இருக்கிறது. மணிமேகலையை பொருத்தவரை விஜய் டிவியில் உள்ள முக்கியமான பிரபலங்களில் இவரும் ஒருவர் என்று கூறலாம்.
அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் தனக்கென தனிப்பட்ட இடத்தை பிடித்தவர் மணிமேகலை. அப்படி இருந்தும் கூட தற்சமயம் மணிமேகலை பங்காற்றி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருப்பது பலருக்குமே அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.
நைட்டெல்லாம் அழுதேன்
ஏனெனில் மணிமேகலை மிகவும் சுறுசுறுப்பான ஒரு நபர் ஆவார். கடந்த சீசன்களில் குக் வித்து கோமாளியில் கோமாளியாக இவர் பங்கேற்று இருந்தார். அப்பொழுது இவர் செய்த நிறைய நகைச்சுவைகள் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர்கள் என்று கூறலாம்.
காலில் அடிபட்டு நடக்க முடியாத சூழல் ஏற்பட்டபோது கூட அதோடு வந்து குக் வித் கோமாளியில் பங்கேற்று நடித்துக் கொடுத...