Tuesday, September 24

Tag: விஜய்

அந்த படமே புரியல.. இதுல G.O.A.T வேற.. வெங்கட்பிரபுவை விளாசும் பிரபலம்..!
Tamil Cinema News

அந்த படமே புரியல.. இதுல G.O.A.T வேற.. வெங்கட்பிரபுவை விளாசும் பிரபலம்..!

கங்கை அமரனின் இரண்டு மகன்கள் வெங்கட்பிரபு, பிரேம்ஜி. இருவருமே நடிகர்கள். ஒரு கட்டத்தில் வெங்கட்பிரபு இயக்குநராகி விட்டார். பிரேம்ஜி நடிப்பது மட்டுமின்றி, திரைப்படங்களுக்கு இசையமைக்கவும் செய்கிறார். வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து நடித்து வரும் கோட் படத்தில் பிரேம்ஜி நடித்துள்ளார். மங்காத்தா, கோவா படங்களை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கிய படம் மாநாடு. சிம்பு நாயகனாக, எஸ்ஜே சூர்யா வில்லனாக நடித்த இந்த படமும் டைம் டிராவல் கதைக்கருவை கொண்டதுதான். படத்தில் ஒருநாளில் நடக்கும் ஒரே சம்பவம் திரும்ப திரும்ப சின்ன சின்ன மாற்றங்களுடன் வருவதுதான் கதை. இது படம் பார்த்த பலருக்கும் புரியாது, அந்த மாதிரியான ஒரு கதையை இயக்கி இருந்தார் வெங்கட்பிரபு. இந்நிலையில், சினிமா விமர்சகர் செய்யாறு பாலு பேசிய வீடியோ ஷாட் ஒன்று சமீபத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது, மாநாடு படம் வெளியானது. பர்ஸ்ட...
சிவகார்த்திகேயனுக்கு தம்பி போல மாறிய தளபதி..! அவரை என்னதாம்பா பண்ணுனீங்க..? – தீயாய் பரவும் வீடியோ..!
Tamil Cinema News

சிவகார்த்திகேயனுக்கு தம்பி போல மாறிய தளபதி..! அவரை என்னதாம்பா பண்ணுனீங்க..? – தீயாய் பரவும் வீடியோ..!

தமிழ் சினிமா ஹீரோக்களை பொருத்த வரை ஆரம்பத்தில் இளமையான தோற்றத்தில் இருப்பார்கள். ஒரு கட்டத்துக்கு பிறகு தொப்பை விழுந்து, கன்னங்கள் உப்பிய நிலையில் உடல் பருமனாகி விடுவர். ஒரு சில நடிகர்கள் மட்டுமே எப்போதுமே ஒரே மாதிரியான உடல் தோற்றத்தில் காணப்படுவர். அதற்கு உதாரணமாக நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், தனுஷ், சத்யராஜ், அர்ஜூன் உள்ளிட்ட பலர் அதே போன்றே இப்போதும் இருக்கின்றனர். ஆனால் அஜீத்குமார், வடிவேலு, பிரபு போன்றவர்கள் உடல் பருமனாக காணப்படுகின்றனர். கமல்ஹாசன், சியான் விக்ரம் போன்றவர்கள் தேவைப்பட்டால் கேரக்டருக்கு ஏற்ப உடல் எடையை கூட்டவோ, குறைக்கவோ செய்துவிடுகின்றனர். ஆனால் கடந்த 1974ம் ஆண்டு ஜூன் 22ல் பிறந்த நடிகர் விஜய்க்கு வயது 49 ஆகிறது. வரும் ஜூன் 22ல் அரைசதம் அடிக்கப் போகிறார். ஆனால், ஆரம்ப கட்டத்தில் படங்களில் நடித்த போது என்ன உடல்வாகுடன் இருந்தாரோ அதே போல்தான் இப்போதும் இருக்கிறார். த...
விஜய்யை ஓவர் டேக் பண்ணிட்டார் சிவகார்த்திகேயன் – திருப்பாச்சி பட நடிகர் பேச்சு..!
Tamil Cinema News

விஜய்யை ஓவர் டேக் பண்ணிட்டார் சிவகார்த்திகேயன் – திருப்பாச்சி பட நடிகர் பேச்சு..!

நடிகர் விஜய் கடந்த 1990களில் தமிழ் சினிமாவுக்குள் வந்தவர். துவக்கத்தில் மற்ற அறிமுக நடிகர்களில் ஒருவராக அவரது சில படங்கள் இருந்தன. இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர் மகன் என்ற அடையாளம் மட்டுமே அவருக்கு இருந்தது. மற்றபடி அவரது படங்கள் பெரிய அளவில் பேசப்படவில்லை. அதற்கு பிறகு எஸ்ஏ சந்திரசேகர் கேட்டுக்கொண்டதால், விஜயகாந்த் தம்பியாக செந்தூரப்பாண்டி படத்தில் நடித்து, ரசிகர்களின் கவனத்தை பெற்றார் விஜய். இந்த படத்தில் நடிக்க விஜயகாந்த் சம்பளமே வாங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இன்று தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வருகிறார் விஜய். தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் என்ற படத்தில் விஜய் நடித்துவருகிறார். லியோ படம், 550 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் விஜயை முந்தும் அளவுக்கு சம்பவம் ஒன்றை செய்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். அதாவது டிவி காம்பியர...
“அவரை பத்தி பேசும் போது, விஜய்யை எதுக்கு நடுவுல கொண்டு வர்றீங்க..” எஸ்ஏ சந்திரசேகர் கோபம்..!
Tamil Cinema News

“அவரை பத்தி பேசும் போது, விஜய்யை எதுக்கு நடுவுல கொண்டு வர்றீங்க..” எஸ்ஏ சந்திரசேகர் கோபம்..!

இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு இயக்குநராக இருந்தவர். 1980, 1990களில் இவரது இயக்கத்தில் பல படங்கள் வெளிவந்தன. இவருக்கு புரட்சி இயக்குநர் என்ற அடைமொழியும் உண்டு. ஏனெனில் அரசியல், சட்டம், சமூகம் சார்ந்த பிரச்னைகளை கேள்வி எழுப்பும் கதைக்கருவாக இவரது படங்கள் இருந்தது. எஸ்ஏ சந்திரசேகரின் பல படங்களில் விஜயகாந்த் நடித்திருந்தார், விஜயகாந்த் பல இயக்குநர்களின் பல படங்களில் நடித்திருந்தாலும், தனது டைரக்டர் என குறிப்பிடுவது எஸ்ஏ சந்திரசேகரை மட்டும்தான். தனது சினிமா பயணத்தில் எஸ்ஏ சந்திரசேகருக்கு மிக முக்கிய பங்கு உண்டு என்பதால் நடிகர், இயக்குநர் என்ற நிலை தாண்டிய ஒரு நெருக்கமான நட்பு அவர்களுக்குள் எப்போதும் இருந்தது. சமீபத்தில் விஜயகாந்த் மறைவு குறித்து ஒரு நேர்காணலில் பேசிய எஸ்ஏ சந்திரசேகர், மிகவும் வருத்தப்பட்டார். அவரை விட 12 வயது மூத்தவன் நான் இருக்கிறேன். ஆனால் வ...
வீட்டுக்கே போகாத விஜய் – கோவளம் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் கூத்து..? இதெல்லாம் நல்லாவா இருக்கு..?
Tamil Cinema News

வீட்டுக்கே போகாத விஜய் – கோவளம் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் கூத்து..? இதெல்லாம் நல்லாவா இருக்கு..?

நடிகர் விஜய் இப்போது கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் (கோட்) படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். கடந்த அக்டோபர் 2ம் தேதி இந்த படத்தின் ஷூட்டிங் பாடல் காட்சியுடன் பிரசாத் ஸ்டுடியோவில் துவங்கியது. சென்னை, ஐதராபாத், தாய்லாந்து, துருக்கி உள்ளிட்ட பகுதிகளில் படப்படிப்பு நடத்தப்பட்டது. இம்மாதம் 23ம் தேதி வரை, சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கோவளம் பகுதிகளில் கோட் படத்தின் ஷூட்டிங் நடக்கிறது. தொடர்ந்து ஒருவார இடைவேளைக்கு பிறகு, படக்குழு ராஜஸ்தான் புறப்பட்டுச் செல்கிறது. அதன்பிறகு இலங்கை செல்லும் படக்குழு, இஸ்தான்புல்லில் படப்பிடிப்பை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது மார்ச் மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முடித்துவிடவும். அதற்கு பிறகு தேவைப்பட்டால் ஏப்ரல் முதல் வாரத்தில் விடுபட்ட காட்சிகளை எடுத்துக்கொள்ளவும் திட்டமிட்டுள்ளது. இப்போது சென்னை கோவளம் பகுதியில் உள்ள நட்சத்திர பங்களாவில் கோட் ஷூட்டிங் நடந்த...
100% உண்மை..! ரஜினி, விஜய் கூட்டணி புதிய படம் அறிவிப்பு..! இயக்குனர் யாரு தெரியுமா..? – பரபரக்குது கோலிவுட்..!
Tamil Cinema News

100% உண்மை..! ரஜினி, விஜய் கூட்டணி புதிய படம் அறிவிப்பு..! இயக்குனர் யாரு தெரியுமா..? – பரபரக்குது கோலிவுட்..!

நடிகர் ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இது ரஜினியின் 170வது படம். இந்த படத்தை இயக்குநர் தசெ ஞானவேல் இயக்கி வருகிறார். இதில் ரஜினிக்கு மகனாக பகத்பாசில் நடிக்கிறார். அமிதாப் பச்சன், ராணா டகுபதி, மஞ்சு வாரியார் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திர நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை தொடர்ந்து ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். அதன் படப்பிடிப்பு மார்ச் மாத இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாதம் முதல் வாரத்திலோ துவங்க இருக்கிறது. இந்த படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு பிறகு நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 படத்தில் ரஜினி நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்தது. இதற்கிடையே இன்று ஒரு மகிழ்ச்சிக்கரமான ஆனால், சற்று வித்யாசமான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதாவது மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிப்பத...
“விஜய் அரசியலுக்கு வந்தால்… இது நடக்கும்..” எழுதி வச்சிக்கோங்க..! கன்னட நடிகர் சிவாண்ணா சொன்ன அந்த ஒரு வார்த்தை…!
Tamil Cinema News

“விஜய் அரசியலுக்கு வந்தால்… இது நடக்கும்..” எழுதி வச்சிக்கோங்க..! கன்னட நடிகர் சிவாண்ணா சொன்ன அந்த ஒரு வார்த்தை…!

தமிழ் சினிமா நடிகர்களில் இப்போது அதிக சம்பளம் வாங்குபவர்தான் நடிகர் விஜய்தான். வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் இப்போது நடித்துவரும் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்துக்காக விஜய் பெறும் சம்பளம் 200 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இதில் அப்பா, மகன் என இரட்டை கேரக்டர்களில் விஜய் நடிக்கிறார். விஜய் மக்கள் இயக்கம் மூலம், அடுத்தகட்டமாக அரசியலுக்கு முடிவில் இருக்கிறார் விஜய். அதற்காக தனது இயக்கம் வாயிலாக பலவிதமான நலத்திட்ட உதவிகளை விஜய் செய்து வருகிறார். முதலில் பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தொகுதி வாரியாக பரிசுத்தொகை வழங்கினார். அது தமிழக மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. தொடர்ந்து சில தினங்களுக்கு முன், மழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு நெல்லையில், நிவாரண உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று நிவாரண பொருட்களை வழங்கினார். அந்த பொருட்களை வாங்குவதை காட்டிலும் விஜயுடன் பலரும் செல...
திடீரென விஜய்யின் முகம் உப்பிப்போய் இருக்க காரணம் இது தான்..! மருத்துவர் கூறிய ஷாக் தகவல்..!
Tamil Cinema News

திடீரென விஜய்யின் முகம் உப்பிப்போய் இருக்க காரணம் இது தான்..! மருத்துவர் கூறிய ஷாக் தகவல்..!

என்னடா.. சொல்றீங்க இளைய தளபதி விஜய்க்கு புதுசா ஒரு நோய் ஏற்பட்டு இருக்கிறதா? என்று ரசிகர்கள் அனைவரும் பாரந்தடித்துக் கொண்டு இந்த விஷயத்தை தற்போது பேசி இணையத்தில் வைரல் ஆக்கிவிட்டார்கள். தமிழகமே தற்போது கண்ணீரில் மிதக்கிறது என்று சொல்லக்கூடிய வகையில் கருப்பு எம்ஜிஆர் விஜயகாந்த் இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு இளைய தளபதி விஜய் சென்றது அனைவரும் அறிந்ததே. அங்கு விஜயின் முகத்தைப் பார்த்து பலரும் பல வகைகளில் அதிர்ச்சி தரக்கூடிய கருத்துக்களை கூறியிருக்கிறார்கள். மேலும் துக்கம் தாங்காமல் அழுது, அழுது அவர் கண்ணம் இது போல புஸ் என்று உப்பி வீங்கி இருக்கலாம் என்று கூறியிருந்தார்கள். அவருக்கு ஸ்ட்ரெஸ் இருந்தாலும், இது போல இருக்கும் என ரசிகர்களின் மத்தியில் சமாளித்து விட்டார்கள். ஆனால் அண்ணன் விஜய் இரண்டு தினங்கள் கழித்து தூத்துக்குடி சென்ற போது அங்கு மக்களை சந்தித்து உதவி பொருட்களை வழங்கி இரு...
மருமகளோடு ரீல்ஸ் செய்த தளபதியின் அம்மா.. வைரலாகும் வேற மாறி வீடியோ..!
Tamil Cinema News

மருமகளோடு ரீல்ஸ் செய்த தளபதியின் அம்மா.. வைரலாகும் வேற மாறி வீடியோ..!

தளபதி விஜய் என்றாலே தமிழ் திரை உலகில் ஒரு மாஸான ரசிகர் கூட்டம் இருப்பதோடு மட்டுமல்லாமல் அவருக்கு என்று ஒரு தனி இடமும் மக்கள் மத்தியில் உள்ளது என கூறலாம். அந்த வகையில் தளபதியின் அம்மா என்றால் சும்மாவா? பல விதமான பன்முக திறமையைக் கொண்டவர் தான் தளபதி அம்மா ஷோபனா சந்திரசேகர். இவர் ஒரு மிகச்சிறந்த பாடகி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் ஒரு மிகச்சிறந்த எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர் போன்ற திறமையை கொண்டவர் என்பது பலருக்கும் தெரிவதற்கு வாய்ப்பில்லை. இவர் தற்போது தனது கணவருடன் இணைந்து துபாய் சென்று இருக்கிறார். சோபாவுக்கும், தளபதி விஜய்க்கும் இடையே இருக்கும் உறவு மிகவும் அற்புதமானது என்று கூறலாம். எப்போதும் அம்மாவின் செல்லப் பிள்ளையாக இருக்கும் விஜய் நடிப்பில் வெளி வந்த லியோ திரைப்படம் கலவை ரீதியான விமர்சனத்தை பெற்றது. இதனை அடுத்து அடுத்த படத்தின் ஷூட்டிங் சென்று கொண்டு இருப்பதால் ...
கேப்டனை பார்க்க ஓடோடி வந்த விஜய்.. இதுவரை விஜய்யை இப்படி பார்த்ததில்லையே.. கண்ணீரில் ரசிகர்கள்..!
Tamil Cinema News

கேப்டனை பார்க்க ஓடோடி வந்த விஜய்.. இதுவரை விஜய்யை இப்படி பார்த்ததில்லையே.. கண்ணீரில் ரசிகர்கள்..!

கேப்டன் அவர்கள் நேற்று அதிகாலை உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இது ஒட்டுமொத்த தமிழக மக்களையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது. தமிழக மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையாக, விடிவெள்ளியாக திகழ்ந்த கேப்டன் அரசியல் சூழ்ச்சிகள் உடன் நடித்த சக நடிகர்களின் துரோகம் ஆகியவற்றினால் விழுந்தார். அதன் பிறகு உடல்நிலை பாதிக்கப்பட்ட கேப்டன் படிப்படியாக உடல்நிலை மோசமாகி நேற்று காலமானார். தொடர்ந்து தமிழக மக்கள் மற்றும் திரை பிரபலங்கள் அரசியல்வாதிகள் என பலரும் அவருடைய உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், பிரபல நடிகர் தளபதி விஜய் நடிகர் விஜயகாந்த் பார்ப்பதற்கு ஓடி வந்திருக்கிறார். நடிகர் விஜய் முதன் முதலில் அறிமுகமான திரைப்படம் விஜயகாந்தின் நாளைய தீர்ப்பு திரைப்படம் தான். இந்த படத்தின் நான் உன்னுடைய தம்பி அண்ணா.. எப்பொழுதும் நான் தோற்க மாட்டேன்.. என்ற வசனத்துடன் நடிகர் விஜயின் அறிமுகம் அ...