அந்த படமே புரியல.. இதுல G.O.A.T வேற.. வெங்கட்பிரபுவை விளாசும் பிரபலம்..!
கங்கை அமரனின் இரண்டு மகன்கள் வெங்கட்பிரபு, பிரேம்ஜி. இருவருமே நடிகர்கள். ஒரு கட்டத்தில் வெங்கட்பிரபு இயக்குநராகி விட்டார். பிரேம்ஜி நடிப்பது மட்டுமின்றி, திரைப்படங்களுக்கு இசையமைக்கவும் செய்கிறார். வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து நடித்து வரும் கோட் படத்தில் பிரேம்ஜி நடித்துள்ளார்.
மங்காத்தா, கோவா படங்களை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கிய படம் மாநாடு. சிம்பு நாயகனாக, எஸ்ஜே சூர்யா வில்லனாக நடித்த இந்த படமும் டைம் டிராவல் கதைக்கருவை கொண்டதுதான். படத்தில் ஒருநாளில் நடக்கும் ஒரே சம்பவம் திரும்ப திரும்ப சின்ன சின்ன மாற்றங்களுடன் வருவதுதான் கதை. இது படம் பார்த்த பலருக்கும் புரியாது, அந்த மாதிரியான ஒரு கதையை இயக்கி இருந்தார் வெங்கட்பிரபு.
இந்நிலையில், சினிமா விமர்சகர் செய்யாறு பாலு பேசிய வீடியோ ஷாட் ஒன்று சமீபத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது, மாநாடு படம் வெளியானது. பர்ஸ்ட...