தலைவிக்கு தில்லை பாத்தியா..? விஜய்யின் அரசியல் நுழைவு குறித்து.. வாணி போஜன் பயமின்றி நச் பதில்..!
நடிகர் விஜயின் அரசியல் நுழைவுக்கு நாளுக்கு நாள் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருவதை கண்கூட பார்க்க முடிகிறது.
இதனை அப்படியே வாக்காக மாற்றிக் காட்டுவாரா நடிகர் விஜய் என்பது அவருடைய கையில் தான் இருக்கிறது. அவருடைய தொண்டர்களின் கையில் தான் இருக்கிறது.
எதிர் வரக்கூடிய இரண்டு ஆண்டுகள் நடிகர் விஜய்க்கு கத்தி மேல் நடக்கக்கூடிய ஆண்டுகளாக இருக்கும் என்பதை ஊர்ஜிதமாக நம்பலாம்.
இது ஒரு பக்கம் இருக்க திரை பிரபலங்களிடம் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கருத்து கேட்டால் அவரை பொது வாழ்க்கைக்கு வரவேற்கிறோம். ஆனால், அவருக்கு வாக்களிக்க வேண்டுமா..? வேண்டாமா..? என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கழுவுற மீனில் நழுவுற மீனாக பதில் கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் முதல் ஆளாக நடிகை வாணி போஜன் நடிகர் விஜயின் அரசியல் நுழைவு குறித்து வெளிப்படையாக தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
...