அன்னைக்கு நைட் ஆர்த்தி செய்த வேலை.. தனி அறையில் கதறி அழுத ஜெயம் ரவி.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!

கடந்த சில நாட்களாகவே ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவருக்கும் இடையேயான விவாகரத்து குறித்து நிறைய யூகங்கள் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றன.

ஏனெனில் ஜெயம் ரவியும் ஆர்த்தியும் விவாகரத்து செய்து கொள்வார்கள் என்பது யாருமே நினைக்காத ஒரு விஷயமாகும். இருந்தாலும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே இது குறித்த பேச்சுக்கள் என்பது சமூக வலைதளங்களில் இருந்து வந்தது.

அன்னைக்கு நைட் ஆர்த்தி

அதனை தொடர்ந்து திடீரென்று ஜெயம் ரவியே ஒருநாள் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்ய போவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஆனால் அதற்கு பதில் அளித்த ஆர்த்தி கூறும்பொழுது ஜெயம் ரவி விவாகரத்து குறித்து தன்னிடம் எந்த ஒரு விஷயத்தையும் கூறவில்லை என்றும் அவர் திடீரென்று இப்படி அறிவித்திருக்கிறார் என்றும் கூறியிருந்தார்.

இது ஜெயம்ரவிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதுவரை பெரிதாக விவாகரத்து விஷயங்களில் வாய் திறக்காமல் இருந்து வந்த ஜெயம் ரவி பிறகு அதிகமாக அது குறித்து அப்டேட்களை கொடுக்க துவங்கியுள்ளார்.

கதறி அழுத ஜெயம் ரவி

அதில் ஜெயம் ரவி கூறும் பொழுது ஏற்கனவே ஆர்த்திக்கு இரண்டு முறை விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய பிறகுதான் இந்த பதிவையே நான் போட்டேன். ஆனாலும் ஆர்த்தி அவருக்கு எதுவுமே தெரியாது என்று மாற்றி கூறுகிறார் என்று கூறியிருந்தார் ஜெயம் ரவி.

மேலும் ஜெயம் ரவியின் வங்கி கணக்குகள் அவருடைய பாஸ்போர்ட், கார் சாவி போன்ற அனைத்தையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் ஆர்த்தி வைத்திருந்தார் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து அவர் விவாகரத்து அறிவித்தவுடன் அவருடைய பாஸ்போர்ட் மாதிரியான விஷயங்களை ஆர்த்தி எடுத்து வைத்துக்கொண்டார்.

அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

இதனால் காவல் நிலையத்தில் புகார் செய்து அந்த பாஸ்போர்ட்டை திரும்ப பெற்று இருக்கிறார் ஜெயம் ரவி. அந்த அளவிற்கு இவர்களுக்கு இடையே பிரச்சனை சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஜெயம் ரவிக்கு ஹோட்டல் ஒன்றில் நடந்த மோசமான அனுபவம் கூட இந்த விவாகரத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

கடந்த ஐந்து வருடங்களாகவே ஜெயம் ரவிக்கு ஆர்த்திக்கும் சுமுகமான உறவு இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு தன்னுடைய மகன் பிறந்த நாளை முன்னிட்டு அவனை பார்ப்பதற்காக ஒரு தனி ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து காத்திருந்தாராம் ஜெயம் ரவி.

ஆனால் ஆர்த்தி அங்கு வராமல் தன்னுடைய மகனை அழைத்துக்கொண்டு இலங்கைக்கு டூர் சென்று விட்டாராம். ஜெயம் ரவி காத்திருந்தார் என்று தெரிந்தும் அதை செய்திருக்கிறார் இதனால் அன்று முழுவதும் தன்னுடைய மகனுக்கு வாழ்த்து சொல்ல முடியவில்லை என்று கண்ணீர் விட்டு அழுது கொண்டிருந்தாராம் ஜெயம் ரவி. இப்படி பல விஷயங்கள் நடந்ததன் விளைவாக தான் இப்பொழுது விவாகரத்துக்கு முன் வந்திருக்கிறார் ஜெயம் ரவி என்று கூறப்படுகிறது.

Check Also

என் மகன் செஞ்ச தப்பு இது தான்.. ஜெயம் ரவி தந்தை கூறிய திடுக் தகவல்..!

நடிகர் ஜெயம் ரவியின் தந்தையான தயாரிப்பாளர் மோகன் ராஜா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது தன்னுடைய மகன் …