ஹீரோயின் ஆகும் ஆஹா கல்யாணம் சீரியல் நடிகை.. ஹீரோ யாருன்னு பாருங்க..!

முன்னொரு காலத்தில் எல்லாம் இளம் நடிகைகளாக திரைப்பட ஹீரோயின்களாக நடிக்க வந்தவர்கள் ஆரம்பத்தில் பல வெற்றி படங்களில் நடித்துவிட்டு புகழ்பெற்ற இளம் ஹீரோயினாக ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடிப்பார்கள்.

பின்னர் வயது கூட கூட திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனால் அவர்கள் உடனடியாக சீரியல் நடிகை ஆகி விடுவார்கள்.

ஹீரோயின் to சீரியல் நடிகை:

உடனே சீரியலில் சில காலம் தங்களது பயணத்தை ஓட்டி அதன் மூலமாக கனிசமான வருமானத்தை சம்பாதிப்பார்கள் .

இப்படித்தான் அந்த காலகட்டத்தில் நடிகைகளின் வாழ்க்கை என்பது இருந்து வந்தது. ஆனால் தற்போது அதற்கு மாறாக அப்படியே உல்டாவாக இருக்கிறது.

இளம் ஹீரோயின்களாக சீரியல் நடிகைகளாக அறிமுகமான பல நடிகைகள் தங்களுக்கான ஒரு இடத்தை சீரியல் வட்டாரத்திலேயே பிடித்து விட்டு இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த நடிகையாக இடத்தை பிடித்து விடுகிறார்கள்.

அதன் பிறகு வெள்ளித்திரைக்கு சென்று அங்கு ஹீரோயின் ஆகி ஒரு நல்ல இடத்தை பிடித்து விடுகிறார்கள். இப்படி ஒரு. ஃபார்முலா நடிகைகளுக்குள் தற்போது இருந்து வருகிறது .

அந்த லிஸ்டில் பலபேரை எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக பிரியா பவானி சங்கர், வாணி போஜன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பல பேரை கூறிக் கொண்டே போகலாம்.

ஆஹா கல்யாணம் சீரியல் நடிகை:

அந்த வரிசையில் தற்போது இடம் பிடித்தவர் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான முன்னணி சீரியல்களில் ஒன்றான ஆஹா கல்யாணம் சீரியலில் கதாநாயகியாக நடித்த அக்ஷயா.

அழகான நடிகையாக பவ்யமான தோற்றத்தில் ஹோமிலியான கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தும் நடிகையாக ஆகா தொடரில் நடித்து வந்த நடிகை அக்ஷயாவுக்கு இல்லத்தரசிகள் இடையே மிகப்பெரிய வரவேற்பும் ஒரு நல்ல அறிமுகமும் அடையாளமும் கிடைத்தது.

இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு தற்போது வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார் அக்ஷயா.

ஆஹா கல்யாணம் தொடரில் இவரது ரோல் மற்றும் நடிப்பு உள்ளிட்டவை கலவையான ரசனைக்கு உள்ளாகியுள்ளது.

ஒரு தரப்பு அவரது நடிப்பை பாராட்டிலும் மற்றொரு தரப்பு அவரது கேரக்டரை பலர் விமர்சிக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது நடிகை அக்ஷயா பிரபல இயக்குனர் ஆன பேரரசுவின் பகலறியான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் அவருக்கு கதாநாயகராக நடிகர் வெற்றி நடிக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மிகப்பிரமாண்டமாக நடந்தது.

ஹீரோயின் ஆனார் அக்ஷயா:

அதில் கலந்து கொண்ட போது அக்ஷயா ஹீரோவுடன் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் இந்த புகைப்படத்தை தனது Instagram பக்கத்தில் வெளியிட்டுள்ள அக்ஷயாவுக்கு அவருக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

சீரியல் நடிகையாக இருந்த பின்னர் சினிமா நடிகையாகியுள்ளதால் அக்ஷயாவும் இந்த படத்தின் வெற்றிக்காக மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Brindha

Check Also

படப்பிடிப்பில் உதவி இயக்குனரிடம் ரித்திஹா சிங்… கழிவறையில் நடந்த அந்த சம்பவம்..!

சினிமாவில் படப்பிடிப்பு என்பது நிறைய நேரங்களில் மோசமானதாக அமைந்துவிடும். ஒரு படப்பிடிப்பு சரியாக நடக்க வேண்டும் என்றால் அங்கு நடிகர்கள் …

Exit mobile version