சைத்ரா ரெட்டி, (Chaitra Reddy) சீரியல், சினிமா என இரண்டிலும் பிரபலமாகி வரும் ஒரு நடிகையாக இருக்கிறார். தற்போது, ‘கயல்’ சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார் . இவர், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் யாரடி நீ மோகினி என்ற தொடரில், ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் சைத்ரா ரெட்டி. அந்த சீரியலில் ஸ்வேதா என்ற பெயரில் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார்.
இப்போது, சன் டிவியில் இவர் நடித்த கயல் சீரியல் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில், ஆல்யா மானசா கணவர், சஞ்சீவ், கார்த்திக் என்ற கேரக்டரில் நடிக்கிறார். இவர்தான், இந்த நாடகத்தில், கயல் கதாபாத்திரத்தின் ஜோடியாக உள்ளார்.
வழக்கமாக, இப்போது தமிழ் சீரியல்கள் பலவும், ஹீரோயினிசம் கொண்டவையாகவே இருக்கின்றன, பெரிய திரையான சினிமாவில், எப்படி ஹீரோயிசம் நிறைந்த படங்களாக வருகிறோ, அதே போல் டிவி சீரியல்களில் பெண்களை மையப்படுத்தும், பெண்கள் போராடி சாதனை படைப்பவர்களாக, எதிரிகளின் சதி திட்டங்களை முறியடிப்பவர்களாகவே, காட்டப்படுகி்ன்றனர். இந்த சீரியலும் அந்த வகையில் சேர்ந்ததுதான்.
Chaitra Reddyதன்னை சுற்றி நடக்கும் தனக்கு எதிரான விஷயங்களை, குடும்ப சிக்கல்களை, எதிர்மறை எண்ணம் கொண்டவர்களால் தனக்கு ஏற்படுத்தும் துன்பங்களை தனது புத்திசாலித்தனத்தால், கயல் என்ற கதாபாத்திரம் வெல்வது போன்ற கதைதான் இதுவும்.
கயல் கேரக்டரில் நடித்துள்ள சைத்ரா ரெட்டி, கடந்தாண்டு வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளிவந்த வலிமை படத்திலும் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். போலீஸ் அதிகாரி தலைமையின் கீழ், கம்ப்யூட்டர் செக்ஷனில் சைபர் க்ரைம் பிரிவில் பணிபுரியும் ஒரு பெண் போலீஸ் கேரக்டரில் இவர் நடித்திருந்தார்.
Chaitra Reddyசீரியல்களில் தொடர்ந்து நடிக்கும் சில நடிகைகள், மக்கள் மத்தியில் நன்கு பிரபலமாகி சினிமாவுக்கு வந்துவிடுகின்றனர். அதேபோல், சினிமாவில் பேமஸ் ஆக இருக்கும் பல நடிகர், நடிகையர் ஒரு கட்டத்துக்கு பிறகு, சினிமா வாய்ப்புகளை இழக்கும்போது, சீரியல்களில் நடிக்க வந்துவிடுகின்றனர்.
இப்போது அக்கா, அண்ணி, அம்மா கேரக்டர்களில் நடிப்பது முன்னாள் சினிமா நடிகைகளாகவே பலரும் இருக்கின்றனர். கயல் நாடகத்தில் நடித்து பிரபலமான சைத்ரா ரெட்டி, வலிமை படத்தில் சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். இன்னும் சில படங்களில் அவர் நடிக்க ஒப்புதல் கேட்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
Chaitra Reddyசைத்ரா ரெட்டி, கயல் நாடகத்தில் நடிக்கும் நேரம் போக, மற்ற நேரங்களில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ்வாக இருக்கிறார். அவ்வப்போது, தனது படங்கள், வீடியோக்களை அப்டேட் செய்கிறார்.
அழகான, கவர்ச்சியான இவரது புகைப்படங்களை காண, ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அதனால், லைக்ஸ் தெறிக்கிறது. கமெண்ட்டுகள் குவிகிறது. ஆனால், மற்ற நடிகைகளை போல, எல்லை தாண்டிய கவர்ச்சி படங்களை, சைத்ரா ரெட்டி பதிவிடுவது இல்லை.
நாகரிகமாக உடைகளை அணிந்தே, படங்களை பதிவிடுகிறார். எனினும், அழகை ரசிக்கும் ரசிகர்கள், லைக் பட்டன்களை தெறிக்க விடுகின்றனர். மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.