silk

சில்க் ஸ்மிதா பெட் ரூமை பார்த்து பயந்து போன நடிகை! அப்படி என்ன இருந்தது தெரியுமா?

நடிகை சில்க் ஸ்மிதா 1970-களில் ஒப்பனை கலைஞராக திரைத்துறை வாழ்க்கையை துவங்கியவர். இவர் தமிழ் நடிகர் வினு சக்கரவர்த்தியால் வண்டிச்சக்கரம் என்ற படத்தில் சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்தை செய்ததை அடுத்து இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்து குவிந்தது.

silk

தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகள் பலவற்றில் நடித்திருக்க கூடிய இவர் ஒரு கவர்ச்சி கன்னியாக விளங்கியதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதில் இன்று வரை தனக்கு என்று ஓர் நிரந்தர இடத்தைப் பிடித்த நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.

சில்க் ஸ்மிதா பெட் ரூமை பார்த்து பயந்து போன நடிகை..

ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இவர் முதன் முதலில் மலையாள திரைப்படமான இணையைத் தேடி என்ற படத்தில் 1979-இல் நடித்த பிறகுதான் தமிழ் வாய்ப்பு கிடைத்தது. இதை அடுத்து 1981-இல் அலைகள் ஓய்வதில்லை படத்தில் பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தார்.

இதைத் தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த இவர் கவர்ச்சி நடனம் ஆடுவதில் வல்லவராக திகழ்ந்ததை அடுத்து ஐட்டம் பாடல்களுக்கு நடனம் ஆடும் நடிகையாக முத்திரை குத்தப்பட்டார்.

silk

எனினும் இவர் சில குணச்சித்திர வேடங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தாலும் இவருடைய உடல் வாக்கை பார்த்து இவரை சில்க் என்று அனைவரும் அழைக்க ஆரம்பித்தார்கள்.

இந்நிலையில் இவரைப் பற்றி அண்மை பேட்டி ஒன்றில் டிஸ்கோ சாந்தி அதிர்ச்சி தரக்கூடிய விஷயம் ஒன்றை சொல்லி இருப்பதை பார்த்து அனைவரும் அதிர்ந்து போய் இருக்கிறார்கள். அப்படி அவர் என்ன விஷயத்தை பகிர்ந்தார் என்பது பற்றி விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

அப்படி என்ன இருந்தது தெரியுமா?

நடிகை சில்க் ஸ்மிதா பற்றி டிஸ்கோ சாந்தி சொல்லும் போது அவர் மிகவும் நல்லவர். இவரை நான் அக்கா என்று தான் அழைப்பேன் என்று கூறியிருக்கிறார். மேலும் அந்தக் காலத்தில் அதிகளவு சம்பளம் வாங்கிய நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார்.

நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெற்று இருக்கக்கூடிய சில்க் ஸ்மிதா அனைவரிடமும் சகஜமாக பழகக்கூடிய குணம் கொண்டவர். இவர் மூன்று லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெற்று இருப்பதாக கூறினார்.

silk

அந்த இடத்தை எட்டிப் பிடிக்க 10 ஆண்டுகள் கடந்த நிலையில் 5 லட்சம் ரூபாய் கொடுத்து வாடகை வீட்டில் ஆரம்பத்தில் இருந்திருக்கிறார்கள். சொந்த வீடு வாங்க பலர் சொல்லியும் அவர் ஏனோ கேட்கவில்லை.

மேலும் சில்க் ஸ்மிதா தனது பெட்டில் பணம் கட்டுக்களை பரப்பி வைத்து அதன் மீது தான் படுப்பார். இதை ஒருநாள் பார்த்த பிறகு நான் மிரண்டு போய் விட்டேன். இதனை அடுத்து ஏன் இப்படி பணக்கட்டுக்களின் மேல் படுகிறீர்கள் என்ற கேள்வியை கேட்டதற்கு அவர் தந்த பதில் என்னை சிந்திக்க வைத்தது.

silk

இதற்கு காரணம் இவர் சான்ஸ் கேட்டு அலைந்து திரிந்த போது யாரும் தன்னை கண்டு கொடுக்கவில்லை. அதனால் தான் இப்போது பணக்கட்டுகளில் படுத்து புரளுகிறேன், என சிரித்தபடி கூறினார்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் சில்க் ஸ்மிதா பெட் ரூமை பார்த்து இதனால் தான் டிஸ்கோ சாந்தி பயந்து போனாரா என ரசிகர்கள் பலரும் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

--- Advertisement ---

Check Also

vijay lokesh kanagaraj

மாஸ்டர்ல வர்ற ஜே.டி ப்ரஃபசர் நெஜமாவே இருக்கார்.. அதிர்ச்சி கொடுத்த லோகேஷ் கனகராஜ்..!

சினிமாவைப் பொறுத்தவரை அதில் வரும் கதைகள் எல்லாமே எங்கோ ஒரு இடத்தில் இயக்குனருக்கு உருவான கதையாகதான் இருக்கும். வெளியில் இருந்து …