தமிழ் சினிமாவிலும் சீரியல்களிலும் அம்மா கேரக்டர் ரோல்களில் நடித்து அனைவரது மனதிலும் இடம் பிடித்த நடிகை சுமதி ஸ்ரீ பற்றி உங்களுக்கு அதிகளவு தெரிந்திருக்கும்.
இவர் தனது 13-ஆவது வயதில் இருந்தே திரைத்துறையில் நடிக்க ஆரம்பித்ததை அடுத்து மூன்று வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்ட தன்னுடைய கணவர் இறந்ததை அடுத்து பல்வேறு வகைகளில் இன்னலுக்கு ஆளாகி இருக்கிறார்.
அதை ஒரு நிமிஷம் நினைச்சு பாருங்க.. போதும்..
சினிமா நடிகையான இவர் நடிகரின் வாரிசு என்று தெரியாமல் சினிமாவில் அடி எடுத்து வைத்த நடிகை சுமதி ஸ்ரீ தன்னுடைய 13 வயதில் இருந்தே திரை உலகில் நடிக்க ஆரம்பித்து விட்டார். இவருடைய அப்பா அம்மா பெரியப்பா என எல்லோருமே சினிமா அனுபவம் உள்ளவர்கள் தான். இவருடைய பெரியப்பா எம்ஜிஆர் திரைப்படங்களில் கணக்குப்பிள்ளை போன்ற வேடங்களில் நடித்திருக்கிறார்.
அவர் மூலம் தான் இவருக்கு சினிமாவில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்து உள்ளது. இதனைப் பயன்படுத்தி தொடர்ந்து திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் பேசும் போது எப்படி திரைப்படங்களில் அழுக வேண்டும் என்ற காட்சி வரும் போது உங்களால் இயல்பாக அழ முடிகிறது என்ற கேள்வியை கேட்டிருக்கிறார்கள்.
இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல நடிகை சுமதி ஸ்ரீ இந்த விஷயத்தை உலகநாயகன் கமலஹாசனிடம் இருந்து தான் கற்றுக் கொண்டதாக கூறியது பலர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
கண்ணீர் விட்டு கதறும் பிரபல நடிகை..
அது மட்டுமல்லாமல் கண்ணீர் விட்டு கதறி அழும் காட்சிகளில் நமக்கு நடந்த பல்வேறு சோக சம்பவங்களை நினைத்தால் உடனே அழுகை கட்டாயம் வரும். அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் தாங்க முடியாத வேதனைகள் கண்டிப்பாக இருக்கும் அதை நினைத்தாலே போதும்.
அதுவும் கண்களை மூடி ஒரு நிமிடம் நினைத்தாலே போதும் கண்ணீர் குபு குபு என்று வந்துவிடும். இது போல பல காட்சிகளை டிராமாக்களில் பண்ணி இருப்பதாக சொன்னதோடு மட்டுமல்லாமல் அந்த இடத்திலேயே கதறி அழுது பேட்டி என்று கூட எண்ணாமல் இயல்பாக கண்ணீர் விட்டு கதறிய பிரபல நடிகையின் பேட்டியை பார்த்து அனைவரும் பதறிப் போய்விட்டார்கள்.
இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் இயல்பாக அழுக கூடிய தன்மையை பார்த்து அனைவரும் அசந்து போய் அவரை பாராட்டி இருக்கிறார்கள்.