என்னுடைய உறுப்பு தளர்ந்து விட்டது.. ஆனாலும், அந்த உணர்ச்சி குறையல.. கூச்சமின்றி கூறிய கரீனா கபூர்..!

நடிகை கரீனா கபூர் இந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர். தன்னுடைய அழகான தோற்றம், சிறப்பான நடிப்புத் திறன் மற்றும் அவருடைய பேஷன் உணர்வு ஆகியோற்றால் ரசிகர்களின் இதயத்தில் குடியிருக்கிறார்.

பாலிவுட்டின் பேஷன் ஐக்கானாகவும் பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கிறார் நடிகை கரீனா கபூர்.

Kareena Kapoor Khan

பல்வேறு வெற்றி படங்களில் நடித்திருக்க கூடிய இவர் சக நடிகர் சைஃப் அலிகான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர்.

தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை எந்த அளவுக்கு கவனித்துக் கொள்கிறாரோ..? அதே அளவுக்கு தன்னுடைய தொழில் வாழ்க்கையும் கவனமாக கவனித்துக் கொள்கிறார் நடிகை கரீனா கபூர்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஒரு விஷயத்தை கூச்சமே இல்லாமல் வெளிப்படையாகவே பதிவு செய்திருந்தார் நடிகை கரீனா கபூர்.

Kareena Kapoor Khan

இன்னும் சொல்லப்போனால் எந்த விஷயமாக இருந்தாலும் அதனை ஒழிவு மறைவுமாக பேசத் தெரியாதவர் என்று கூறலாம். இதன் காரணமாகவே இவருக்கான தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

எந்த கேள்வியை எழுப்பினாலும் அதனை கடந்து விட்டு செல்லாமல் ரசிகர்கள் தன்னிடம் இந்த கேள்வியை எதிர்பார்க்கிறார்கள் இந்த கேள்விக்கான பதிலை பெற விருப்பப்படுகிறார்கள் எனும்போது அவர்களால் வசதி வாய்ப்புகளை பெற்றுள்ள நான் அதற்கான பதிலை கொடுப்பது தான் முறையாக இருக்கும் என்று எந்த கேள்வியையும் தவறவிடாமல் வெளிப்படையாக ஒளிவு மறைவு இல்லாமல் பதில் கொடுக்கக் கூடியவர் கரீனா கபூர் என்ற ஒரே காரணத்திற்காக இவருக்கு பலர் ரசிகராக இருக்கிறார்கள்.

சமீபத்திய பேட்டி ஒன்றில், திருமணமாகி, குழந்தைகள் குடும்பம் என்று ஆன பிறகும் கிளாமரான புகைப்படங்களை வெளியிடுகிறார்கள். போட்டோ சூட்டுகளை நடத்துகிறீர்கள். இதை நாங்கள் எப்படி புரிந்து கொள்வது..? என கேள்வி எழுப்புகிறார் தொகுப்பாளர்.

Kareena Kapoor Khan

இந்த கேள்வியை கேட்ட கரீனா கபூர் கொஞ்சமும் பதட்டம் அடையவில்லை. தெளிவான தன்னுடைய பதிலை கொடுக்க ஆரம்பிக்கிறார். அவர் கூறியதாவது, உண்மைதான்.. எனக்கு திருமணம் ஆகிவிட்டது.. இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நான் மகிழ்ச்சி அடைகிறேன்.. ஒரு குடும்ப தலைவியாக நான் பெருமைப்படுகிறேன்… என்னுடைய கணவருக்கு மனைவியாக அவருக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பதில் நான் ஆனந்தம் அடைகிறேன்.

எல்லாம் சரிதான்.. ஆனால் நான் எப்படி இருக்க வேண்டும்..? என்று என்னுடைய ரசிகர்கள் ஒரு எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதும் என்னுடைய கடமையாக நான் பார்க்கிறேன்.

Kareena Kapoor Khan

நான் முன்பே சொன்னது போல எனக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் பிறந்து விட்டது.. வயதாகிவிட்டது.. என்னுடைய முகத்தில் சுருக்கங்கள் கூட தெரிகின்றன.. என்னுடைய தொடைகள் தளர்ந்து விட்டது.. நரைமுடி கூட வந்து விட்டது..

ஆனாலும்.., என்னை நான் கவர்ச்சியாக உணர்வதில் எந்த தடையும் இல்லை. இப்போதும் நான் என்னை கவர்ச்சியாகவே உணர்கிறேன். ரசிகர்களுக்கு நான் விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதை நான் ஒரு நாளும் மறக்க மாட்டேன்.

அவர்கள் என்னுடைய கவர்ச்சியான பக்கங்களை பார்த்து ரசித்தவர்கள். தற்போதும் ரசிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள். அப்படி இருக்கும் பொழுது எனக்கு திருமணம் ஆகிவிட்டது, வயதாகிவிட்டது. முடி நரைத்து விட்டது, என்னுடைய உறுப்புகள் தளர்ந்து விட்டது போன்ற காரணங்களை வைத்து அவர்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் போவது எனக்கு ஒரு விதமான குற்ற உணர்வை கொடுக்கக்கூடியதாக இருக்கிறது.

Kareena Kapoor Khan

என்னுடைய குடும்ப வாழ்க்கையையும் சினிமா வாழ்க்கையையும் சரிசமமாக நான் நகர்த்திக் கொண்டிருக்கிறேன் என பேசி இருக்கிறார். இவருடைய இந்த பேச்சுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகிறது.

எந்த நடிகையும் தன்னுடைய ரசிகர்களை இந்த அளவுக்கு உள்வாங்கி அவர்களுடைய எதிர்பார்ப்பு என்ன என்பதை தெரிந்து கொண்டு பேசுவார்களா என்றால் தெரியாது.

Kareena Kapoor Khan

அவர்கள் பல்வேறு காரணங்களை கூறுவார்கள். ஆனால், நடிகை கரீனா கபூர் கூறிய காரணம் நம்பும் விதமாகவும் அவர் எப்படி தன்னுடைய ரசிகர்களை தன்னை வளர்த்து விட்ட தனக்கு வசதி வாய்ப்புகளை கொடுத்த ரசிகர்களை மதிக்கிறார் என்பதற்கும் அவருடைய தொழிலை எந்த அளவுக்கு மதிக்கிறார் என்பதற்கும் இவருடைய அந்த பேச்சுக்கள் எடுத்துக்காட்டாக இருக்கிறது என்றும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

அடுத்த Divorce இவங்களா? அதிகரிக்கும் விரிசல்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

கடந்த சில நாட்களாகவே தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக ரசிகர்களின் மனதை கவர்ந்த ஜோடிகள் தொடர்ந்து அடுத்தடுத்து விவாகரத்து …