ஜெயம் ரவி ஆர்த்தி.. இருவரில் யார் தவறு..? காதலை சேர்த்து வைத்த குஷ்பு சொன்னதை கேட்டு.. பரபரப்பில் திரையுலகம்..!

தற்போது இணையம் எங்குமே பேசும் பொருளாக மாறி இருக்கும். ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து விஷயத்தில் யார் தவறு செய்தார்கள் என்பது போன்ற பேச்சுக்கள் வெகுவாக வலுத்து வருவதோடு கலவை ரீதியான விமர்சனங்களும் வெளி வருகிறது.

 

இந்நிலையில் ஜெயம் ரவி கொடுத்த விவாகரத்தை ஒப்புக்கொள்ள மனசு இல்லாமல் ஆர்த்தி ஜெயம் ரவி குறித்து திடுக்கிடும் உண்மைகளை வெளிப்படுத்துவதை அடுத்து அண்மையில் பிரதர் பட பாடல் வெளியீட்டு விழாவில் இவர் பத்திரிக்கையாளர் முன் அளித்திருந்த பேட்டி பலரையும் யோசிக்க வைத்தது.

ஜெயம் ரவி ஆர்த்தி.. இருவரில் யார் தவறு..?

ஜெயம் ரவி ஆர்த்தி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர் காதலுக்கு பக்க பலமாக இருந்தவர் நடிகை குஷ்பூ என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரிந்து இருக்கும்.

இந்நிலையில் 15 ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக பயணித்ததை அடுத்து தன்னுடைய எதிர்காலம் பற்றியும் தன் குழந்தைகளின் எதிர்காலம் பற்றியும் கேள்விகள் பல வைத்திருக்கும் ஆர்த்தியின் மனநிலை பற்றி பலரும் பல்வேறு வகையான விமர்சனங்களை செய்திருந்தார்கள்.

இந்த விவகாரத்தில் ஜெயம் ரவிக்கும் கோவாவை சேர்ந்த பாடகி கென்னிஷா விற்கும் தொடர்பு உள்ளது போல சில விஷயங்கள் இணையம் எங்கும் வெளி வந்ததை அடுத்து அது குறித்து வாழு, வாழ விடு என்ற வகையில் பேட்டியில் ஜெயம் ரவி பேசி இருந்தார்.

அதுமட்டுமல்லாமல் இணையத்தில் இவரது பெயரை ஜெயம் ரவியோடு இணைத்து பேசியதோடு மட்டுமல்லாமல் அண்மையில் ரசிகர் ஒருவர் ஜெயம் ரவி உங்களோடு நலமாக இருக்கிறாரா? என்று கேட்ட கேள்விக்கு தக்க பதிலை பாடகி அளித்திருந்தார்.

அது மட்டுமல்லாமல் நீங்க பாதுகாப்பான ஆளா? உன் பெற்றோர்களுடன் பாதுகாப்பாக இருக்கிறீர்களா? என்று ஆர்த்தியை தாக்கி பதிலடி தந்தது போல் போட்டிருந்த பதிவு இணையம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காதலை சேர்த்து வைத்த குஷ்பு சொன்னதை கேட்டு..

இந்நிலையில் குஷ்பூ இந்த விவகாரத்தில் தலையிட்டு இருவரையும் சேர்த்து வைத்திடுவார் என்று பலரும் எதிர்பார்த்த வேளையில் ஜெயம் ரவி அதற்கெல்லாம் மசிவதாக தெரியவில்லை போல இதை அடுத்து குஷ்பூ அண்மையில் வெளியிட்டு இருக்கக்கூடிய x பதிவில் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி பெயரினை குறிப்பிடாமல் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

இதனை அடுத்து அந்தப் பதிவில் குஷ்பூ ஒரு உண்மையான மனிதன் தன்னுடைய தனிப்பட்ட ஆசை, தேவை, விருப்பம் சுதந்திரம் என அனைத்தையும் தன் குடும்பத்தின் முன் இரண்டாவது பட்சமாக தான் வைப்பான்.

 

உறவுகளில் காதல் சில நேரங்களில் குறைக்கலாம் கூடலாம். ஆனாலும் மரியாதை குறையாமல் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறார். தன் குழந்தைகளை அன்போடு பார்க்கும் மனைவியை மதிப்பவன் தான் உண்மையான மனிதன் என்று கூறினார்.

அப்படி நடந்து கொள்ளாதவன் சுயநலவாதி என்றும் உயர்ந்த சுயநலத்தால் அவன் செய்த செயல் அவனை பூமராங் போல திரும்ப தாக்கும் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் குழந்தையின் தாயை மதிக்க தெரியாத மனிதன் மற்றவர்களிடம் மரியாதையை எதிர்பார்ப்பதோ அல்லது வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது என்பதை திட்டவட்டமாக சொல்லிவிட்டார்.

பரபரப்பில் திரையுலகம்..

இதனை அடுத்து குஷ்பூ மறைமுகமாக ஜெயம் ரவியை சாடக்கூடிய வகையில் தான் இந்த பதிவினை வெளியிட்டு இருக்கிறார் என்று இணையதள வாசிகள் கூறி வருகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் சுயநலவாதி ஆக இருக்கும் யாரையும் கர்மா சும்மா விடாது என்று பலரும் கூறி வரக்கூடிய வேளையில் இது பற்றி இணையம் முழுவதும் பரபரப்பு நிகழ்வதோடு திரை உலகமும் இந்த பரபரப்பில் மூழ்கியுள்ளது.

அத்தோடு காதலை சேர்த்து வைத்த குஷ்பூ சொன்னதை கேட்டாவது ஜெயம் ரவி மாறுவாரா? இல்லை இந்த நிலை தொடருமா? என்பது இனிவரும் நாட்களில் நமக்கு எளிதாக தெரிந்து விடும்.

About Brindha

Check Also

நீங்க அப்படிபட்ட ஆளா? உன் பெற்றோருடன் அப்படி இருக்கீங்களா? கென்னிஷாவின் செருப்படி பதில்.. அதிர்ந்த இணையம்..

கடந்த ஒரு மாதமாகவே இணையதளம் முழுமையாக ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி விவாகரத்து விஷயமானது காத்து தீ போல் பரவி …