“இன்னொரு பெண்ணுடன் அதை..” – கமல் குறித்து ஸ்ருதிஹாசன் தாய் சரிகா பகீர் தகவல்..!

திரை உலகில் சாதித்த ஜாம்பவானாக உலகநாயகன் கமல் விளங்கியிருந்தாலும், தனது எதார்த்த வாழ்வில் அவரால் ஜொலிக்க முடியவில்லை என்று தான் கூற வேண்டும்.

இரண்டு திருமணங்கள் செய்து கொண்டு, மேலும் திருமணம் செய்யாமல் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த கமலஹாசனை பற்றி இவரது முன்னாள் மனைவி சரிகா தாகூர் கூறிய விஷயம் தற்போது அனைவரதை கவனத்தையும் திரும்ப வைத்துள்ளது.

உலகநாயகன் கமலஹாசனின் முன்னாள் மனைவியான சரிகாவிற்கு பிறந்தவர் தான் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன். மராட்டிய குடும்பத்தில் பிறந்த இவர் ஆரம்ப நாட்களில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் பாலிவுட் படங்களில் கதாநாயகியாக நடித்த சரிகா சில படங்களில் உடை அமைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார். இவர் 1988 ஆம் ஆண்டு கமலஹாசனை திருமணம் செய்து கொண்டார்.

இதனை அடுத்து சென்னையில் கமலோடு குடும்பம் நடத்த குடிப்பெயர்ந்தவர், 1991 ஆம் ஆண்டு அக்ஷரா ஹாசனை பெற்றெடுத்தார். இதனை அடுத்து இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டதை அடுத்து 2004 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று மீண்டும் மும்பைக்கு திரும்பினார்.

இந்நிலையில் கடந்து சில தினங்களாக கமலஹாசன் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவின் காதல் பற்றி இணையங்களில் செய்திகள் வெளி வந்ததை அடுத்து சரிகா கொடுத்திருந்த பழைய பேட்டி ஒன்றை தூசி தட்டிய ரசிகர்கள் தற்போது இதை சமூக வலைதளத்தில் போட்டு விட்டார்கள்.

இந்த பேட்டி தற்போது சமூக வலைத்தளத்தில் இருக்கும் ஆர்வலர்களை ஈர்த்துள்ளது. இதற்கு காரணம் கமலஹாசன் பிரிந்ததின் மூலம் உங்களது வாழ்க்கை எப்படி ஆகிவிட்டது என்று என்றாவது வருத்தப்பட்டு இருக்கிறீர்களா? என்று தொகுப்பாளர் ஒருவர் கேட்க அதற்கு மிகச் சரியான பதிலை அவர் தந்திருக்கிறார்.

அந்த பதிலில் ஏற்கனவே சினிமாவில் உச்சகட்ட நடிகையாக இருக்கும் போது தான் கமலை திருமணம் செய்து கொண்டதாகவும், அவர் என்னை விட்டுவிட்டு வேறொரு பெண்ணை விரும்பியது அவரது சுதந்திரம். எனவே அதைப் பற்றி எனக்கு எந்த விதமான வருத்தமும் இல்லை.

மேலும் எத்தனை வாய்ப்புகள் கிடைத்தாலும் எனது வாழ்க்கையை இப்படியே தொடரத்தான் நான் இப்போது விரும்புகிறேன். இந்த வாழ்க்கை தான் எனக்கு பிடித்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் அழகான இரண்டு பெண் குழந்தைகள் அன்போடு தன்னோடு இருப்பதால் எனக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் உள்ளது.

எனவே என் வாழ்க்கையைப் பற்றி நான் ஏன் வருத்தப்பட வேண்டும் என்று கூறி இருப்பதோடு கமலுக்கு வேறொரு பெண்ணின் மீது விருப்பம் வருவது அவருடைய உரிமை அதை நான் தடை செய்ய விரும்பவில்லை என்பதையும் பதிவு செய்து இருக்கிறார்.

About Brindha

Check Also

படப்பிடிப்பில் உதவி இயக்குனரிடம் ரித்திஹா சிங்… கழிவறையில் நடந்த அந்த சம்பவம்..!

சினிமாவில் படப்பிடிப்பு என்பது நிறைய நேரங்களில் மோசமானதாக அமைந்துவிடும். ஒரு படப்பிடிப்பு சரியாக நடக்க வேண்டும் என்றால் அங்கு நடிகர்கள் …

Exit mobile version