மேக்கப் போடும் போது அங்க இங்க தொட்டாங்க.. தப்பா நடக்க பார்த்தாங்க.. பிரபல நடிகை பேச்சு!..

தற்போது திரை உலகை புரட்டிப் போடக் கூடிய வகையில் கேரளவில் சமர்ப்பிக்கப்பட்ட ஹேமா கமிஷனின் அறிக்கையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு திரை உலகில் நடக்கும் திரை மறைவு வேலைகளை தோல் உரித்து காட்டிவிட்டது.

இதனை அடுத்து கேரளா நடிகர் சங்கத்திலிருந்து முக்கிய புள்ளிகள் பலரும் ராஜினாமா செய்துள்ளார்கள். இதனை அடுத்து பேட்டி ஒன்றில் பேசிய மலையாள நடிகை ஷகிலா மலையாள திரைப்படத்தில் நடந்த கொடுமைகளை புட்டு புட்டு வைத்தார்.

திரை உலகம் முழுவதும் அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை..

பெண்களுக்கு எதிராக நடக்கும் இந்த அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை தமிழ், தெலுங்கு, பாலிவுட் என அனைத்து தரப்பிலும் திரை உலகம் முழுவதுமே அதிக அளவு காணப்படுகிறது.

இந்த அட்ஜஸ்ட்மென்ட் விவகாரத்திற்கு காரணமே இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தான். இந்த விஷயம் பற்றி அக்ரீமெண்டிலேயே பேசி விடுகிறார்கள். இதை விட அவலம் ஒன்று உள்ளது. அடுத்த படத்திற்கும் கூப்பிடுகிறேன் என்று மேனேஜர்களும் அட்ஜஸ்ட்மென்ட்க்கு கூப்பிடுவது தான் அது.

இதைத்தொடர்ந்து தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி பாதிக்கப்பட்டவர்களே அண்மைக்காலமாக இது பற்றிய விஷயங்களை விரிவாக இணையங்கள் வழியாகவும் ஊடகங்களின் வழியாகவும் தைரியமாக தெரிவித்து வருவது வரவேற்கத்தக்க ஒன்றுதான்.

அந்த வகையில் தற்போது நடிகை ரூபா ஸ்ரீக்கு மற்றும் ஷகிலாவிற்கு நடந்த விஷயம் பற்றி இந்தப் பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.

நடிகை ரூபாஸ்ரீக்கு நடந்த விஷயம்..

நடிகை ரூபஸ்ரீ ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த ரூமில் தங்கி இருந்த போது அந்த ரூம் கதவை நான்கு பேர் குடித்த நிலையில் வந்து தட்டி ரகளை செய்து இருக்கிறார்கள். இதனை அறிந்து கொண்ட ஷகிலா அந்த நபர்களை தட்டிக் கேட்டபோது அது அடிதடியாக மாறியது என்று சொல்லி இருக்கிறார்.

இப்படித்தான் நடித்த படத்தில் இது போன்ற சிக்கல்கள் யாருக்காவது ஏற்பட்டால் அதை பலமுறை தட்டி கேட்டிருப்பதாக வெளிப்படையாக ஷகிலா கூறியதை அடுத்து ரூபா‌ ஸ்ரீ யின் நிலைமை எப்படி இருந்தது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

அதுமட்டுமல்லாமல் கேரள திரைப்பட உலகமானது ஆணாதிக்கம் நிறைந்த ஒன்று என்பதால் தான் மலையாள திரைப்படங்களை வேண்டாம் என்று வெறுத்துப் போகின்ற அளவிற்கு எனக்கும் பிரச்சனை தந்ததை அடுத்து நான் ஒதுங்கி விட்டேன் என ஓப்பனாக பேசினார்.

ரூபா ஸ்ரீக்கு மட்டுமல்ல இன்னும் பலர்..

நடிகை ரூபஸ்ரீக்கு மட்டுமல்ல இது போன்ற விஷயங்களில் பல பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவ்வளவு ஏன் ஒரு முறை எனக்கு மேக்கப் போட வந்த நபர் கூட அத்துமீறி என்னிடம் நடந்ததோடு மட்டுமல்லாமல் அங்கே இங்கே என்று தொட்டு சில்மிசம் செய்தார். இந்த விஷயம் எனக்கு மட்டும்தான் தெரியும்.

சில நேரத்தில் என்னிடம் பலர் அத்துமீறி நடக்க முயற்சியும் செய்து இருக்கிறார்கள். எனினும் அவற்றையெல்லாம் ஒரு அல்லையில் வைத்துக்கொண்டு தான் என் குடும்பத்திற்காக என்ற துறையில் நான் பயணித்தேன்.

இப்படி பல அசிங்கங்கள் சினிமாவில் தான் இருக்கிறது என்று நடிகை ஷகிலா பேட்டி ஒன்றில் தனது மன ஆதங்கத்தை கொட்டி தீர்த்து இருக்கிறார். இதனை அடுத்து இந்த விஷயமானது இணையத்தில் படு வேகமாக பரவி ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது

About Brindha

Check Also

படப்பிடிப்பில் உதவி இயக்குனரிடம் ரித்திஹா சிங்… கழிவறையில் நடந்த அந்த சம்பவம்..!

சினிமாவில் படப்பிடிப்பு என்பது நிறைய நேரங்களில் மோசமானதாக அமைந்துவிடும். ஒரு படப்பிடிப்பு சரியாக நடக்க வேண்டும் என்றால் அங்கு நடிகர்கள் …

Exit mobile version