தமிழ் திரையுலகில் அனைவராலும் அன்போடு புன்னகை அரசி என்று அழைக்கப்பட்ட சினேகா ஒரு காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தார். அதுமட்டுமல்லாமல் குடும்ப பாங்கான கேரக்டர்களை பக்காவாக தேர்வு செய்து குடும்ப குத்துவிளக்காகவே இவர் தனது படங்களில் தன்னை பிரதிபலித்து காட்டி இருப்பார்.
பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் என்ற பாடல் இவர் கண் அழகும், பல்லழகும் பக்காவாக இருக்கும் படியான ஒளிப்பதிவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் இவர் காலடியில் தஞ்சம் புகுந்தார்கள் என்று கூறும் அளவுக்கு தனது நடனத்திறனாள் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார்.
ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கட்டி இழுத்த அந்த பாடலுக்கு பின்னால் இவர் நடிப்பில் வெளிவந்த ஒவ்வொரு படமும் இவருக்கு வெற்றியை தந்தது.
சினிமாவில் பரபரப்பாகவும் பிசியாகவும் இருக்கும் போதே இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து வந்தார். எந்த காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக் கொடியை காட்டியதை அடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டு தங்களது வாழ்க்கையை திறம்பட நடத்தி வருகிறார்கள்.
எப்போதுமே நடிகைகளுக்கு திருமணம் ஆகிவிட்டால் சினிமாவை விட்டு விலகுவார்கள். அந்த வரிசையில் இவரும் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கி இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் சின்னத்திரைகளில் நடக்கும் ரியாலிட்டி ஷோக்களுக்கு நடுவராக களம் இறங்கினார்.
சமூக வலைதளங்களில் படுவிசியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி ஃபோட்டோ ஷூட்டை நடத்தி தனது ரசிகர்களோடு எப்போதும் தொடர்பில் இருப்பார்.
அந்த வரிசையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து சொர்க்கமே என்றாலும் அது நம்ம சினேகா போல வருமா என்று ரசிகர்களை பாட வைத்து விட்டார். அந்த அளவு பக்காவாக தனது மேனி அழகை விரசமில்லாமல் வெளிப்படுத்தும் புடவையில் இவர் கியூட்டாக இருக்கிறார்.
சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க என்று கேட்பது போல இவர் புடவை உடுத்து இருக்கும் விதம் இவரின் நளினம் அழகாக இந்த புகைப்படத்தில் வெளிப்பட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் பார்த்து பார்த்து ரசித்தேன் என்ற பாடல் வரிகளை முனமுறுத்தபடியே இந்த புகைப்படங்களை பார்த்து வருகிறார்கள்.