மூன்று ஆண்டுக்கு பிறகு ஷபானா ஷாஜகான் கர்ப்பம்.. இது தான் காரணமா..? ரசிகர்கள் ஷாக்..!

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் சின்னத்திரையில் அதிக வரவேற்பு பெற்றவர் நடிகை ஷபானா ஷாஜகான். மலையாளம் மற்றும் தமிழ் தொலைக்காட்சிகளில் அதிக வரவேற்பை பெற்ற ஒரு நடிகையாக இவர் இருந்து வருகிறார்.

ஷபானா மும்பையில் உள்ள ஒரு பள்ளியில் படித்தவர். சிக்கிமில் ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். சொல்ல போனால் இவருக்கும் தமிழ்நாட்டுக்கும் சம்பந்தமே கிடையாது என்று கூறலாம். ஆனால் சின்னத்திரை மூலமாக தமிழ் மக்கள் அனைவருடனும் தனக்கான ஒரு உறவை உருவாக்கிக் கொண்டார் ஷபானா.

மலையாளத்தில் வாய்ப்பு:

2016 ஆம் ஆண்டு முதன்முதலாக சூர்யா தொலைக்காட்சியில் விஜய தசமி என்ற தொடர் மூலமாக மலையாளத்தில் அறிமுகமானார் நடிகை ஷபானா. அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய வாய்ப்புகள் வரத் துவங்கின.

தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு ஜீ தமிழில் வெளியான செம்பருத்தி சீரியலில் பார்வதி என்கிற கதாபாத்திரத்தில் அறிமுகமானார். பார்வதி கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய சீரியல்களில் வாய்ப்புகளும் வர துவங்கின.

எந்த ஒரு சீரியலில் நடித்தாலும் அதில் சிறப்பாக தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளக் கூடியவர் ஷபானா. இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் முதலில் செலியனாக நடித்த நடிகர் ஆரியனை இவர் காதலித்து வந்தார்.

மிஸ்டர் மனைவி வரவேற்பு:

இந்த நிலையில் 2021ல் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் திருமணம் செய்து கொண்ட பிறகும் கூட சின்னத்திரையில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தார் ஷபானா. இந்த நிலையில் செம்பருத்தி சீரியலில் பெற்ற அதே வரவேற்பை அடுத்து அவர் நடித்து வந்த மிஸ்டர் மனைவி சீரியலிலும் பெற்று வந்தார்.

மிஸ்டர் மனைவி சீரியல் தற்சமயம் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது இந்த நிலையில் தற்சமயம் அந்த சீரியலில் இருந்து விலகப் போவதாக அறிவித்திருக்கிறார் ஷபானா.

அவருக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. எனவே அவர் கர்ப்பமாகியுள்ளார் அதனால்தான் சீரியலை விட்டு செல்கிறார் என்று பேச்சுக்கள் வர துவங்கின.

அப்டேட் கொடுத்த ஷபானா:

இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்ட ஷபானா கூறும்பொழுது ”மிஸ்டர் மனைவி சீரியலில் இருந்து விலகுவது எனக்கு மனதிற்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது. அதில் உள்ள அஞ்சலி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம்தான்.

ஆனால் என்னுடைய தனிப்பட்ட காரணங்களால்தான் இந்த சீரியலில் இருந்து விலகுகிறேன், அடுத்து அந்த கதாபாத்திரத்தில் நடிக்க போகிறவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மேலும் நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்றெல்லாம் அந்த சீரியலில் இருந்து விலகவில்லை.

உண்மையில் நான் கர்ப்பமாகவே இல்லை மீண்டும் ஒரு புதிய ப்ராஜெக்ட்டில் நல்ல கதாபாத்திரத்தில் உங்களை சந்திக்கிறேன் என்று கூறி இருக்கிறார் ஷபானா. இதன் மூலம் அவர் திரைத்துறையில் வாய்ப்பை பெற்றிருக்கலாம் என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன.

About Brindha

Check Also

சாக்கடை புழுவாட்டம்தான் அவங்க வாழ்க்கை.. ராதிகா மீனா குறித்து பேசிய பிரபலம்..!

சினிமா என்று வந்து விட்டாலே அவர்களுக்கு சொந்த வாழ்க்கை என்று இருக்கக்கூடாது என்று நினைக்கும் அளவிற்கு தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகுபவர்களாக …

Exit mobile version