40 வயதை நெருங்கி விட்டாலும் கூட நாளுக்கு நாள் அழகில் தேவதையாய் இருக்கக் கூடிய நடிகை திரிஷா-வின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.
நடிகை திரிஷா நடிப்பில் உருவான ராங்கி என்ற திரைப்படம் கடந்த இரண்டு வருடங்களாக வெளியாகாமல் பொட்டியில் தூங்கிக் கொண்டிருந்தது. தற்பொழுது தூசி தட்டி எடுத்து அந்த படத்தை மீண்டும் வெளியிடுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது படக்குழு.
இதற்கான பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிறப்பித்து வருகிறார் நடிகை திரிஷா. சமீபத்தில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை பிராட்டியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பிரபலமான நடிகை திரிஷா இதுதான் சரியான நேரம் என்று ராங்கி திரைப்படத்தை வெளியிட முனைப்பு காட்டி வருகிறார்.
இதற்காக நடிகர் திரிஷாவின் கவர்ச்சி காட்சிகள் சில தனியாக படமாக்கப்பட்டு படத்தில் இணைக்கப்பட்டு இருக்கிறது என்றும் விவரம் அறிந்து வட்டாரங்கள் கூறுகின்றன.
எனவே இந்த படத்தின் ரிலீஸ்-ஐ ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள் நடிகை திரிஷாவின் ரசிகர்கள். பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பிறகு நடிகை திரிஷாவின் மார்க்கெட் மீண்டும் சூடு பிடித்திருக்கிறது.
மட்டுமில்லாமல் நடிகர் விஜய் நடிப்பில் உருவாக உள்ள புதிய திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. தற்பொழுது வாங்கி பல பிரமோஷனல் கலந்து கொள்ளும் நடிகை திரிஷா விதவிதமா உடைகளை அணிந்து கொண்டு தோன்றுகிறார்.
அந்த வகையில் தற்போது அழகு தேவையா தோற்றமளித்தவருடைய சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதில் நடிகை திரிஷாவின் உதட்டை பார்த்த ரசிகர்கள் இது உதடா..? அல்லது கோவைப்பழமா..? என்று வர்ணித்து வருகின்றனர்.