சனியனே!!! இந்தா….Dress இழுத்து மூடு – கோபத்தில் நடிகையை செஞ்சி விட்ட பிரபு தேவா!

இந்திய சினிமாவின் பிரபலமான நடன கலைஞரும், திரைப்பட நடிகரும் , நடன இயக்குனரும், திரைப்பட தயாரிப்பாளரமாக இருந்து வருபவர் தான் நடிகர் பிரபுதேவா.

நடிகர் பிரபுதேவா:

இவர் பிரபல டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்தின் மகன் ஆவார். தந்தையின் மூலம் சிறுவயதில் இருந்தே நடனத்தில் ஆர்வம் கொண்ட பிரபுதேவா நடனத்தின் மீது அலாதி பிரியும் கொண்டவராக இருந்து வந்தார்.

prabhu deva 1

இவர் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று மிகவும் பிரபலமாக அழைக்கப்படுகிறார். முதலாவது வெற்றி விழா திரைப்படத்திற்காக நடனம் ஆடி தனது நடன பயணத்தை துவங்கினார் நடிகர் பிரபுதேவா.

அதன் பிறகு கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு நடனமாடி இருக்கிறார். இதனிடையே மின்சார கனவு திரைப்படத்தில் இடம் பெற்ற வெண்ணிலவே வெண்ணிலவே பாடலில் மிகச்சிறப்பான நடனம் ஆடி திறமையை வெளிப்படுத்திய பிரபுதேவாவிற்கு சிறந்த நடன ஆசிரியருக்கான இந்திய தேசிய திரைப்பட விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது.

இவர் நடனத்தையும் தாண்டி பல்வேறு படங்களுக்கு நடன இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்.

மேலும் போக்கிரி, வில்லு உள்ளிட்ட தமிழ் மற்றும் ஹிந்தி திரைப்படங்களையும் இயக்கி இருக்கிறார் .

உதவி நடன இயக்குனராக முதன்முதலில் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த அக்னி நட்சத்திரம் என்ற திரைப்படத்தில் ராஜா ராஜாதி என்ற பாடலில் நடனமாடி நடன கலைஞராக தனது பயணத்தை துவங்கினார்.

குரூப் டான்சர் மீது காதல் – திருமணம்:

அதில் குரூப் டான்ஸரில் ஒருவராக பிரபுதேவா நடனம் ஆடி இருப்பார். அதை அடுத்து ஒரு சில திரைப்படங்களுக்கு நடன கலைஞராகவே தனது பணியை செய்து வந்த பிரபுதேவா பின்னர் காதலன் திரைப்படத்தில் நடித்து நடிகராக அறிமுகமாகி இருந்தார்.

prabhu deva 2

அதையடுத்து லவ் பேர்ட்ஸ், நாம் இருவர் நமக்கு இருவர், காதலா காதலா , நினைவிருக்கும் வரை, வானத்தைப்போலியன், டபுள் உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

ஹீரோவாக பலம் வந்துக்கொண்டிருந்த பிரபு தேவா குரூப் டான்ஸ்களில் நடனம் ஆடி வந்த ரமலத் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பிரபுதேவாவுக்கு மூன்று மகன்கள் இருக்கிறார்கள். இதனிடையே அவர் நயன்தாராவுடன் நெருக்கமாக பழகி அவருடன் தகாத உறவு வைத்துக்கொண்டு காதலித்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டார் .

ஆனால்,இதனை அவரது முதல் மனைவியான ரமலத் ஏற்க மறுத்தது பெரும் சர்ச்சைக்கு உள்ளான விஷயமாக பார்க்கப்பட்டது .

நயன்தாராவுடன் ரகசிய உறவு:

இதை அடுத்து நயன்தாராவை பிரிந்தார் பிரபுதேவா. பின்னர் திருமணமே செய்யாமல் இருந்து வந்த பிரபுதேவா அண்மையில் தான் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு தற்போது மூன்றாவது மனைவியின் மூலமாக ஒரு குழந்தையும் பிறந்துள்ளது. தொடர்ந்து திரைப்படம் நடனம் உள்ளிட்டவற்றில் அதிக ஆர்வத்தை செலுத்தி தொடர்ந்து அதே எனர்ஜியோடு பயணித்து வரும் பிரபுதேவா 51 வயதாகியும் இளமையான தோற்றத்திலே வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை வேதிகாவுடன் சேர்ந்து பேட்ட ராப் படத்தில் நடித்துள்ளார்.

சனியனே!!! இந்தா….Dress இழுத்து மூடு:

அந்த படத்தின் ப்ரோமோஷன் விழாவில் கலந்துகொண்ட பிரபுதேவா மற்றும் வேதிகாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

அதில் வேதிகா மேடையில் ஏறி பேசிவிட்டு கீழே இறங்கி வந்து இருக்கையில் அமரும்போது அவரது ஆடை பிரபுதேவாவின் காலில் மாட்டிக் கொள்ள அவர் கடும் கோபத்துடன் ரியாக்சன் கொடுத்து அந்த ஆடையை எடுத்து வேதிகாவிடம் போடுகிறார்.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாக…. மாஸ்டரின் ரியாக்ஷனிலே அவரது மைண்ட் வாய்ஸ் என்ன புரியுது என கூறி கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Check Also

வெள்ள அபாய எச்சரிக்கை முதல்.. மீனவர் பாதுகாப்பு வரை.. அரசு வெளியிட்ட புது செயலி.. சிறப்பான சம்பவமா இருக்கே..!

இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சி துவங்கிய காலகட்டம் முதலே எந்த ஒரு விஷயத்திலும் கொஞ்சம் அதிக தொழில்நுட்ப வளர்ச்சியை தொட்ட மாநிலமாக …