ஆன்லைன் சூதாட்டத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தும் விழித்தெழு…!!

இன்று கணினி மூலம் எண்ணற்ற தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்துள்ளது. இது மக்களுக்கான சௌவுரிகத்தை செய்து கொடுத்திருப்பதோடு மட்டுமல்லாமல் கடுமையான ஆபத்தையும் தந்திருக்கிறது. இதை எடுத்துக்காட்டும் விதமாக தயாராகி வரும் திரைப்படம் தான் விழித்தெழு.

 இந்த திரைப்படத்தில் ஆன்லைன் மூலம் பண இழப்பை சந்தித்தவர்கள் நம் அருகிலேயே தான் இருப்பார்கள்.  இந்த ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க தமிழக அரசு முன்வந்து நடவடிக்கை எடுக்க துவங்கியுள்ளது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தை மையமாகக் கொண்டு தீமைகளை பற்றி விளக்கக்கூடிய ஒரு விழிப்புணர்வு படமாக உருவாகி வருகிறது  விழித்தெழு.

 இந்தப் படத்தை ஆதவன் சினி கிரியேஷன் தயாரித்து உள்ளது .மேலும் இந்த படத்தை சி எம் துறை ஆனந்த் தயாரித்திருக்கிறார். இவர் சிவகங்கை நகராட்சியின் நகர் மன்ற தலைவராக இருக்கிறார். மேலும் பத்திரிகையாளரும் கூட இன்றைய சூழ்நிலையில் எப்படி இணையதள மோசடிகள் வந்துள்ளது.

மேலும் அதை தடுப்பதற்கான வழிகள் என்ன? தட்டிக் கேட்கும் விதம் என்ன? என்பதை அழகாக இந்த படம் எடுத்து உரைக்கும் என்று கூறி இருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தை இயக்குனர் தமிழ்செல்வன் இயக்க உள்ளார்.

இதில் கதை மிகவும் சிறப்பாக உள்ளதால் இந்த காலகட்டத்திற்கு உரிய இந்த கதையை உடனடியாக படப்பிடிப்பு நடத்தி உடனே ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற மும்மரம் இவர் களம் இறங்கி இருக்கிறார்.

 மதுரை மற்றும் சிவகங்கை பகுதிகளில் படப்பிடிப்பு பிரமாண்ட முறையில் நிறைவடைந்துள்ளது. இதில் கதாநாயகனாக முருகா அசோக் கதாநாயகியாக காயத்ரி ரெமோ ,பருத்திவீரன் சுஜாதா, சரவண சக்தி, வினோதினி, வில்லு முரளி ரஞ்சன் , மணிமாறன் சுப்ரமணியபுரம் தனம், நெஞ்சுக்கு நீதி திருக்குறளி, அறிமுகம் லட்டு ஆதவன், கார்த்திக் மற்றும் பல நடித்திருக்கிறார்கள்.

 இந்த படத்திற்கான இசையை நல்ல தம்பி அமைத்திருக்கிறார். மேலும் கதைக்கேற்றபடி அழகாக பாடல்கள் வந்துள்ளது என்று கூறியிருக்கிறார்கள்.

எடிட்டிங்கை எஸ் ஆர் முத்துக்குமார் செய்ய ஸ்டண்ட் எஸ் ஆர் ஹரி முருகன், நடனம் ஸ்டைல் பாலா, ஒளிப்பதிவு இனிய கதிரவன் ஆகியோர் இருக்க படத்திற்கான திரைக்கதை வசனத்தை தமிழ்செல்வன் எழுதியிருக்கிறார். இதனை அடுத்து இந்தப் படம் விரைவில் வெளிவரும் என தெரியவந்துள்ளது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …