குல தெய்வம் கோவிலுக்கு சென்ற நயன்தாரா… பட வாய்ப்புகள் கேட்டு வேண்டியிருப்பாரோ?

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. ரஜினியை போலவே, இவர் நின்றாலும், நடந்தாலும், எங்கு சென்றாலும் உடனே அது சோஷியல் மீடியாவில் வைரலாகி விடுகிறது.
வழக்கமாக நாயகிகளை போல இல்லாமல், தன்னை மையப்படுத்திய கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த நயன்தாரா, அத்தகைய படங்களில் மட்டுமே நடித்தார். மாயா படத்துக்கு பிறகு அவர் நடித்த நானும் ரவுடிதான், கோலமாவு கோகிலா, கனெக்ட், ஓ2, காத்து வாக்குல ரெண்டு காதல், நெற்றிக்கண், அறம் உள்ளிட்ட படங்களில், அவரது நடிப்பே பிரதானமாக இருந்து, படத்தை வெற்றி பெறச் செய்தது.

கோலமாவு கோகிலா படத்தில், போதைப்பொருள் கடத்தும் அபலை பெண்ணாக ஒரு மாஸ் நடிப்பை தந்திருப்பார் நயன்தாரா. அறம் படத்திலும் அவரது நடிப்பு, மிக சிறப்பாக இருந்தது.
ஆனால், சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் நிஜ வாழ்வில் சில சிக்கலான சர்ச்சைகளுக்கு நயன்தாரா ஆளானார். அதில், ஆறு ஆண்டுகளுக்கு மேலாக, விக்னேஷ் சிவனுடன் திருமணம் ஆகாமலேயே ஒன்றாக வாழ்ந்தது, பின் திருமணம் செய்து கொண்டு, வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றது, இப்போது உலகம், உயிர் என குழந்தைகளுக்கு பெயர் வைத்தது என, பல விஷயங்கள், நயன்தாராவுக்கு தலைவலி தருவதாக இருக்கிறது.

இந்நிலையில், கடந்தாண்டு வெளியான ஓ2 மற்றும் கனெக்ட் என்ற இரண்டு படங்களுமே நயன்தாராவுக்கு சரியான வெற்றிப்படங்களாக அமையவில்லை. இந்த படங்கள் பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்த்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இப்போது ஜெயம் ரவியுடன், இறைவன் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்து, அட்லி இயக்கத்தில், ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இது, முதல் பாலிவுட் படம் என்பதால், பாலிவுட்டில் அடுத்தடுத்த படங்கள், நயன்தாரா நடிக்க வாய்ப்புள்ளதா, இல்லையா என்பதை இந்த ஜவான் படமே தீர்மானிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், ஷாருக்கான் நடிப்பில் வந்த பதான் படம் பிளாக்பஸ்டர் மூவியாக மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், இந்த படமும் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும், தமிழ்பட இயக்குநர் அட்லி, பாலிவுட்டில் இயக்கும் முதல் படம் ஜவான் என்பதும் கவனிக்கத்தது.
இந்நிலையில், இன்று கும்பகோணம் பகுதியில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சென்றுள்ளனர். அங்கு கோவிலில் அவர்கள் இருவரும் சுவாமி கும்பிடுவது போன்ற புகைப்படங்கள், தற்போது வைரலாகி வருகின்றன.

பட வாய்ப்புகள் மீண்டும் பழையபடி குவிய வேண்டும் என்றோ, அல்லது தான் நடித்துள்ள ஜவான், இறைவன் படங்கள் மாபெரும் வெற்றியடைய வேண்டும் என்றோ நயன்தாரா கடவுளிடம் பிரார்த்தனை செய்ய கோவிலுக்கு சென்றிருக்கலாம். அல்லது, தனது கணவர் விக்கி, அஜித்தின் 62 படத்தை இயக்குவதாக இருந்த நிலையில், அந்த படம் கைநழுவி போய் விட்டது. இனிமேல் அவ்வாறு நடக்காமல், பெரிய ஸ்டார் நடிகர்களின் படங்களை இயக்கும் வாய்ப்பு, விக்னேஷ் சிவனுக்கு தேடி வர வேண்டும் என்றும் கூட நயன்தாரா வேண்டுதல் செய்திருக்கலாம் என நெட்டிசன்கள் கமெணட் பாக்சை நிரப்பி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …