தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் தனக்கான ரசிகர்களை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. சின்னத்திரையில் சீரியல்களில் நடித்ததன் மூலம் சினிமா ஹீரோயின்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கக் கூடிய ஒருவர்.
பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரில் நடித்த பொழுது அந்த தொடரில் தனது ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 2013ஆம் ஆண்டு இவர்களுடைய திருமணம் நடைபெற்றது. திருமணமாகி கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முக்கியமான காரணம் நடிகை ரச்சிதா மகாலட்சுமி தொடர்ந்து சினிமாவில் மற்றும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். குழந்தை இல்லாதது குறித்து ரச்சிதா மகாலட்சுமி-க்கு கவலையே கிடையாது.
சிகிச்சை எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் ரச்சித்தா மகாலட்சுமி ஓய்வெடுக்க வேண்டும். ஆனால் அதனை செய்யாமல் தொடர்ந்து சீரியலில் நடிப்பது லேயே மும்முரமாக இருக்கிறார். மருத்துவர்கள் கூறியும் கணவர் கூறியும் கணவரது வீட்டார் கூறியும் ஓய்வெடுக்காமல் தொடர்ந்து நடிப்பில் இட்டுபட்டு வருகிறார் நடிகை மகாலட்சுமி.
இதன் காரணமாக ஏற்பட்ட மனக்கசப்பு கருத்து வேறுபாடுகள் தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பேசியிருந்த நடிகர் தினேஷ் எங்களுடைய பிரிவு நிரந்தரமானது கிடையாது தற்காலிகமானது நாங்கள் மீண்டும் சேர்ந்து பயணிப்போம் என்று கூறியுள்ளார்.
நடிகை ரச்சிதா மகாலட்சுமி குறித்த தகவல்களுக்கு இதுவரை அவர் எதுவும் விளக்கம் கொடுக்கவில்லை. தற்பொழுது பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டிருக்கும் ரச்சித்தா மகாலட்சுமி தன்னுடைய வாழ்க்கை பிரச்சினை குறித்து நிச்சயமாக பேசுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
நிச்சயமாக இப்படி ஒரு டாஸ்க் அனைத்து சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இருந்திருக்கின்றது. எனவே கண்டிப்பாக நடிகை ரச்சித்தா மகாலட்சுமி தன்னுடைய நிலை திருமணத்தின் நிலை குறித்து நிச்சயம் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பது ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்த நடிகை ரச்சிதா மகாலட்சுமிக்கு தற்போது அவருடைய கணவரும் துணையாக இல்லை என்ற தகவல் எந்தளவுக்கு உண்மையானது.. எதனால் இந்த பிரிவு என்பதை அவராகவே கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.