பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்திற்கான கதை இதுதானா??இணையத்தில் கசிந்தது..!!

2019 ஆம் ஆண்டு ‘கோமாளி’ என்ற திரைப்படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் தனது முதல் படத்தில் தமிழ் சினிமாவில் அனைவரது பாராட்டையும் பெற்றார்.

இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு தானே நடித்து ‘லவ் டுடே’ என்ற படத்தின் மூலமாக அறிமுக நாயகனாக அறிமுகமானார் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தில் நடிகை இவானா நடித்திருந்தார். இதற்கு முன்பு இயக்குனர் பாலா இயக்கிய ‘நாச்சியார்’ என்ற திரைப்படத்தில் அறிமுக நாயகி ஆக அறிமுகமானார் இவானா இந்த படத்தில் ஜிவி பிரகாசுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த படம் போதிய அளவுக்கு வெற்றி படம் இல்லாததால் இவரது அறிமுகம் தமிழ் சினிமாவிற்கு பெரிய அளவில் அவரது வெளிச்சம் தமிழ் சினிமா ரசிகர்களை கவரவில்லை.

பிறகு ‘லவ் டுடே’ என்ற திரைப்படத்தின் மூலம் அனைத்து இளசுகளின் மனதிலும் இவானா இடம்பிடித்தார் என்றால் அது மிகை ஆகாது. ஏனெனில் இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் அவ்வளவு கச்சிதமாக வேறு எந்த ஒரு ஹீரோயினாலும் இந்த கதாபாத்திரத்தை பூர்த்தி செய்ய முடியாத அளவிற்கு இருந்தது என்றால் மிகையாகாது.

மேலும் இந்த படம் குறைந்த பட்ஜெட்டில் அதிக கலெக்சன் எடுத்த ஒரு மாபெரும் வெற்றி படமாக அமைந்ததால் அடுத்தடுத்து பிரதீப் ரங்கநாதன் வெற்றிப் பயணத்தை தக்க வைத்துக் கொள்ள இளைஞர்களுக்கு பிடிக்கும் வகையில் மீண்டும் ஒரு கதைக்களத்தை தயார் செய்து வருகிறார்.

இந்த கதையின் முக்கிய கருத்து இன்றைய இளைஞர்களின் இன்ஜினியர் வாழ்க்கையை படமாக எடுக்கப் போவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவுகின்றன. முன்னதாக இளைஞர்கள் மத்தியில் காதல் சம்பந்தமான திரை களத்தை எடுத்து மாபெரும் வெற்றி படமாக அமைந்த நிலையில் மறுபடியும் இளைஞர்கள் பற்றி இன்ஜினியர் இளைஞர்களின் வாழ்க்கையை படமாக எடுத்து மற்றும் ஒரு வெற்றிப்படம் எடுக்க தயாராகி வருகிறார் பிரதீப் ரங்கநாதன்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …