தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தற்போது இவர் தமிழில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இது மட்டுமின்றி தெலுங்கில் 4 படங்களும், மலையாளத்தில் 2 படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.
விரைவில் திரையரங்குகள் திறந்த பின் இந்த திரைப்படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.சாதாரண கதாபாத்திரங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷிற்கு மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
மகாநதி என்ற பெயரில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவான இப்படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகைக்கான தேசிய விருதை கீர்த்தி சுரேஷ் பெற்றார்.
இதனையடுத்து தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரை உலகிலும் முன்னணி நடிகையாக வலம் வரத்தொடங்கினார். தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வரும் மகேஷ் பாபுவுடன் இணைந்து சர்க்காரு வாரி பட்டா என்ற படத்தில் நடித்துள்ளார். இதுதவிர பல தெலுங்கு படங்களிலும் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது கீர்த்தி சுரேஷிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் இவர் ஒப்பந்தமாகியுள்ள புதிய படங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழில் ரஜினியின் அண்ணாத்த படத்திலும், இயக்குனர் செல்வராகவனுடன் இணைந்து சாணி காகிதம் எனும் படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அடுத்ததாக நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் அண்ணாத்த படத்தை தொடர்ந்து, இயக்குனர் பாலா இயக்கத்தில் ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
இந்த படத்தி ஹீரோவாக நடிகர் அதர்வா நடிப்பதாகவும், படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிப்பதாகவும் தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே சென்னை வந்த கீர்த்தி சுரேஷ் தன்னுடைய சமீபத்திய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட ஒரே நாளில் 10 லட்சம் லைக்குகள் குவிந்துள்ளது.