படவாய்ப்புகள் இல்லாமல் கிராமத்தில் செட்டில் ஆன ஸ்ரீ திவ்யா வெளியிட்ட புகைப்படம்

தமிழ் தெலுங்கு மற்றும் இந்தியில் முன்னணி நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஸ்ரீ திவ்யா அவர்கள். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் பட வாய்ப்புகள் எதுவும் இன்றி தற்போது கிராமத்தில் செட்டில் ஆகிவிட்டார்.

தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத்தில் பிறந்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா இவர் தனது மூன்று வயதில் தனது திரைப்பட வாழ்க்கையை தொடங்கியவர் இவர் பத்துக்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் மேலும் தெலுங்கு தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார் நடிகை ஸ்ரீதிவ்யா.

2000 ஆவது ஆண்டு தெலுங்கு திரைப்படமான அனுமான் ஜங்ஷன் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் நடிகை ஸ்ரீதிவ்யா அதைத்தொடர்ந்து அதே ஆண்டு தெலுங்கில் வெளியான யுவராஜு என்ற திரைப்படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

அதன்பின்பு 2003 ஆம் ஆண்டு வீடு என்ற தெலுங்கு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இதுபோல தெலுங்கில் 10 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் 2010 ஆம் ஆண்டு வெளியான மனசார என்ற திரைப்படத்தில் அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் நடிகை ஸ்ரீதிவ்யா.

அதன்பிறகு 2012 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான பஸ் ஸ்டாப் என்ற திரைப்படத்தில் சைலஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இன்று 2013 ஆம் ஆண்டு மல்லலே என்ற திரைப்படத்தில் லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன்பிறகு முதன்முதலாக தமிழில் 2013 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் லதா பாண்டி என்ற கதாபாத்திரத்தில் முதன் முதலாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். இந்த படம் கிராமங்கள் தோறும் மிகப்பெரிய அளவு வெற்றி பெற்ற நிலையில் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா.

2014 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ஜீவா என்ற திரைப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் அதே ஆண்டு வெளியான வெள்ளைக்காரத்துரை என்ற திரைப்படத்தில் யமுனா என்ற கதாபாத்திரத்திலும் தனது அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தால் நடிகை ஸ்ரீதிவ்யா.

2015 ஆம் ஆண்டு காக்கிச்சட்டை என்ற திரைப்படத்தில் திவ்யா என்ற கதாபாத்திரத்தின் மூலம் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அருமையான நடிப்பையும் நடனத்தையும் வெளிப்படுத்தி இருந்தார் இந்த இந்த படம் சரியாக ஓடவில்லை என்றாலும் இந்த படத்தின் பாடல்கள் இவருக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.

அதற்குப் பிறகு 2015 இல் வெளியான பென்சில் ஏத்தி மருது போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழில் மிகவும் அறியப்பட்ட நடிகையாக விளங்கின நடிகை ஸ்ரீதிவ்யா அவர்கள். பின்பு பட வாய்ப்புகள் எதுவும் இன்றி சொந்த ஊரான ஹைதராபாத்துக்கு சென்றார் நடிகை ஸ்ரீதிவ்யா. தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் ஒரு கிராமத்தில் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அது பாண்டிச்சேரிக்கு அருகே உள்ள ஆரோவில் என்ற இயற்கை சூழ்ந்த பல வெளிநாட்டுக்காரர்கள் தங்கி வாழும் ஒரு அருமையான கிராமம் ஆகும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …