சத்தம் இல்லாமல்  நடிகர் ஆதியின் சப்தம் திரைப்படம் பூஜையுடன் தொடங்கியதா? விபரம் உள்ளே…!!

 நடிகர் ஆதி நடித்த  ஈரம் திரைப்படத்தைப் பற்றி உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்ட படங்களில் இந்த படம் ஒன்றாக திகழ்ந்தது. அதுமட்டுமல்லாமல் விறுவிறுப்பான கதை அம்சம் கொண்டு இருந்ததால் இந்த படம் வெற்றியை தந்தது.

 இந்த படத்தை 2009ம் ஆண்டு அறிவழகன் இயக்கினார் மேலும் என்ற திரைப்படத்தில் நடிகர் ஆதி நடித்திருந்தார்.இதனை அடுத்து மீண்டும் இந்த கூட்டணி தற்போது ஒன்று சேர்ந்து இரண்டாவது படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது.

 இந்த படத்தின் பெயர் என்ன என்றால் சப்தம்  என்பதாகும்.மேலும் இந்த படத்துக்கு கதாநாயகனாக ஆதி நடிக்க படத்திற்கான இசையை தமன் அமைக்க 7 ஜி பிலிம்ஸ் மற்றும் அறிவழகனின் ஆல்பா  பிரேம் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்க உள்ளார்கள்.

 அடுத்து இந்த படத்திற்கான பட பூஜையில் நடிகர் ஆதி மற்றும் அவரது மனைவியான நிக்கி கல்ராணி கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் மேலும் படத்தின் இயக்குனர் அறிவழகன் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

 அந்த வகையில் பட பூஜைக்கு உரிய புகைப்படங்கள் அனைத்தும் தற்போது இணையத்தில் வெளியாகிய ட்ரெண்டிங் ஆகிவிட்டது என்று கூறலாம்.

 ஏற்கனவே ஈரம் படத்தில் வெற்றி பெற்ற இந்த கூட்டணியானது தற்போது சப்தம் படத்தில் பட்டையை கிளப்பும் என்று ரசிகர்கள் ஆதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

 மேலும் ஆதியின் ரசிகர்கள் அனைவரும் இந்த படம் எப்போது வெளிவரும் என்று கேட்டிருப்பதோடு இது ஒரு திரில்லர் கலந்த படமாக இருக்குமா? என்ற கேள்வியையும் முன் வைத்திருக்கிறார்கள்.

பொதுவாகவே ஆதி நடிக்கின்ற படங்கள் யாவும் வித்தியாசமான கதைய அம்சத்தை கொண்டிருக்கும் அதில்  எந்த அளவும் சந்தேகம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

 எனவே அந்த வகையில் இந்த படமும் ஒரு வித்தியாசமான கதை தகவலோடு தான் ரசிகர்களை சந்திக்க வரும் என்று இயக்குனர் கூறி இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் படத்தை காணும் ஆவலில் காத்திருக்கிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …