கயல் ஆனந்தி நடித்த படம் மங்கை. அதே போல் அமீர் நடித்த படம் இறைவன் மிகப்பெரியவன். இந்த படங்களை தயாரித்த தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் இப்போது போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் சிக்கியிருக்கிறார்.
இதனால் மங்கை படமும் ரிலீஸ் ஆகவில்லை. அமீர் பெயரும் தேவையின்றி இந்த விவகாரத்தில் அடிபட்டு வருகிறது.
ஜாபர் சாதிக்
போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் சிக்கி இருக்கும் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் குறித்த விஷயங்கள் நாளுக்கு நாள் மக்களை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் திரைப்பட இயக்குனர் அமீர் விரைவில் கைது செய்யப்படலாம் என்ற தகவலை பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய தன்னுடைய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
சூட்கேஸ் எடுத்துச் செல்லும் காட்சிகள்..
இதையும் படியுங்கள்: ஜாஃபர் சாதிக்கால் சிக்கிய உதயநிதி.. கோட்டை விட்ட உளவுத்துறை.. போட்டு உடைத்த பிரபலம்..
அவர் கூறியதாவது, ஜாபர் சாதிக் வீட்டின் சிசிடிவி வீடியோக்களை கைப்பற்றி இருக்கிறார்கள். அதில் இயக்குனர்கள், நடிகர்கள் ஜாபர் சாதிக் வீட்டிற்குள் கையை வீசிக்கொண்டு வருவதும், திரும்பி செல்லும் பொழுது சூட்கேஸ் எடுத்துச் செல்வதுமான காட்சிகள் பதிவாகி இருக்கிறது.
ஆஹா, ஓஹோ என புகழ்கிறார்கள்
நடிகர்கள், இயக்குனர்கள் ஜாபர் சாதிக்கை ஆஹா, ஓஹோ என புகழ்கிறார்கள். அவர் எப்படி இந்த அளவுக்கு பணம் செலவு செய்கிறார். அவருடைய பூர்வீகம் என்ன, அவருடைய வரலாறு என்ன, என்ன தொழில் செய்கிறார் என்றெல்லாம் எதையும் யோசிப்பது கிடையாது.
பணத்தை கொடுத்தால் எதை வேண்டுமானாலும் பேசுவது என சாடி இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.
கயல் ஆனந்தி
சமீபத்தில் படத்தின் ரிலீஸ் விழாவின் பொழுது, நடிகை கயல் ஆனந்தி ஜாஃபர் சாதிக்கை ஆஹா ஓஹோ என புகுந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய படத்தின் தயாரிப்பாளர் என்ற ஒரே காரணத்திற்காக சட்டவிரோதமான முறையில் பணம் சம்பாதித்த ஒருவரை, இப்படி புகழ்ந்து தள்ளுவது எந்த அளவுக்கு சரியாக இருக்கும்.
உங்களை பின் தொடரக்கூடிய ரசிகர்களுக்கு இது எப்படியான எடுத்துக்காட்டாக இருக்கும் என்றெல்லாம் யோசிப்பது கிடையாது. ஏதாவது ஒரு கன்றாவியை பேசுவது.
ஆனால் நீங்கள் புகழ்ந்து பேசிய ஒரு நபர் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் சிக்கியிருக்கிறார் என்று விளாசி இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்
இதையும் படியுங்கள்: என்னது விஜய் என் நண்பரா..? ஹலோ.. அப்டி சொல்றது…” டாப் ஸ்டார் பிரசாந்த் ஒரே போடு..
CCTV ஆதாரங்களில் பல விஷயங்கள்
போதைப் பொருள் கடத்தில் விவகாரத்தில் அமீர் கைது செய்யப்படலாம். சிக்கிய CCTV ஆதாரங்களில் பல விஷயங்கள் அம்பலமாகி உள்ளது.
நடிகை கயல் ஆனந்தி இப்படி தயாரிப்பாளரை புகழ்ந்தது கன்றாவியாக உள்ளது என இந்த விவகாரத்தில் பல ரகசியங்களை உடைத்திருக்கிறார் பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன்.