இக்கட்டான சமயங்களில் கடவுளுக்கு நேர்ந்து கொண்டு இது போன்ற அபிஷேகங்களை செய்து கடவுளின் மனதை குளிர வைக்க வேண்டும் என்று பலரும் வேண்டுதல்கள் செய்வது வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படி அவர்கள் வேண்டிய பிறகு அந்த காரியம் நடந்து முடிந்து விட்டால் அபிஷேகத்திற்கு உரிய பொருட்களை வாங்கி பூஜை முறைகள் பூஜைகளை செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
நீங்கள் செய்யக்கூடிய அபிஷேகத்திற்கு எண்ணற்ற பொருட்கள் பயன்படும். இந்த ஒவ்வொரு பொருளும் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட பலனை கொடுக்கிறது. அப்படி நீங்கள் செய்யக்கூடிய அபிஷேகப் பொருட்களால் உங்களுக்கு என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
அபிஷேகம் செய்யும் பொருட்கள் மற்றும் அதனால் ஏற்படும் பலன்கள்
பசும்பாலை கொண்டு நீங்கள் அபிஷேகம் செய்வதால் உங்களுக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும். சர்க்கரையைக் கொண்டு அபிஷேகம் செய்யும்போது எதிரியை அழித்து ஜெயிக்க கூடிய நிலையை உருவாக்கிக் கொடுக்கும்.
இளநீரைக் கொண்டு அபிஷேகம் செய்வதின் மூலம் நல்ல எதிர்கால சந்ததி உங்களுக்கு உருவாகும் அதுமட்டுமல்லாமல் ஆரோக்கியம் ஏற்படும்.
நெய்யைக் கொண்டு அபிஷேகம் செய்வதால் உங்களுக்கு முக்தி நிலை ஏற்படும். எலுமிச்சம் பழம் கொண்டு நீங்கள் அபிஷேகம் செய்வதால் எம பயம் நீங்கும்.
வாழைப்பழத்தைக் கொண்டு நீங்கள் அபிஷேகம் செய்ய உங்கள் தோட்டத்தில் பயிர்கள் செழித்து வளரும். பலாப்பழம் கொண்டு நீங்கள் அபிஷேகம் செய்யும்போது உங்களுக்கு மங்களகரமான பலன்கள் வந்து சேரும்.
மாம்பழத்தைக் கொண்டு அபிஷேகம் செய்யும் போது உங்களுக்கு செல்வம் மற்றும் வெற்றி மேல் வெற்றி வந்து குவியும். நீரைக் கொண்டு அபிஷேகம் செய்யும் போது சகல விதமான நன்மைகளும் உங்களுக்கு வந்து சேரும்.
அன்னத்தைக் கொண்டு அபிஷேகம் செய்யும்போது உங்களுக்கு அரசு உரிமைகள் எளிதில் வந்து சேரக்கூடிய யோகங்கள் உண்டாகும். சங்கால் அபிஷேகம் செய்யும் போது உங்களுக்கு சங்கடமில்லாத வாழ்வு மற்றும் ஆரோக்கியமான வாழ்வு ஏற்படும்.
சந்தனத்தைக் கொண்டு நீங்கள் அபிஷேகம் செய்யும்போது சகல விதமான சுகமும் பொருளும் வந்து சேரும். மஞ்சள் தூளால் அபிஷேகம் செய்யும்போது நல்ல நட்புகள் கிடைக்கும். திருமஞ்சனத் தூள் கொண்டு நீங்கள் அபிஷேகம் செய்யும்போது தீராத நோய்கள் அனைத்தும் தீரும்.
பசுந்தயிர் கொண்டு அபிஷேகம் செய்யும் போது மகப்பேறு யோகம் ஏற்படும் தேனால் அபிஷேகம் செய்ய குரல் வளம் உண்டாவதோடு அனைத்தும் சுகமாக நடக்கும்.