அம்மாடியோவ்..! இது வீடா இல்ல அரண்மனையா..? 150 கோடியில்.. புதிய வீடு..! குடும்பத்தினருடன் குடியேறிய தனுஷ்..!

நடிகர் தனுஷ் 150 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய வீட்டில் குடியேறி இருக்கிறார். நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் வாதிதி என்ற திரைப்படம் வெளியாகி கலையான விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் ரசிகர்களின் ஆரவாரத்துடன் வெற்றி நடை போட்டு வருகிறது.

இந்நிலையில் தன்னுடைய புதிய வீட்டில் குடியேறி இருக்கிறார் நடிகர் தனுஷ். இந்த புகைப்படங்களை திருடா திருடி பட இயக்குனர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், வாழும் போதே பெற்றோர்களை சொர்க்கத்தில் இருப்பது போல உணர வைக்கும் பிள்ளைகள் தெய்வமாக கருதப்படுவார்கள் என்று நடிகர் தனுஷ் குறித்து உணர்ச்சிபூர்வமான கருத்துக்கள் சிலவற்றை பதிவு செய்திருக்கிறார்.

முன்னதாக போயஸ் கார்டனில் கட்டப்படும் இந்த வீடு சம்பந்தமான பண பிரச்சனை காரணமாகத்தான் நடிகர் தனுஷுக்கும் அவரது மனைவி ஐஸ்வர்யாவிற்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்பட்டது.

விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட பிறகு சமீபத்தில் நடிகர் தனுஷின் மகன் படிக்கும் பள்ளியில் நடைபெற்ற ஒரு விழாவில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஜோடியாக கலந்து கொண்டனர்.

இதனால் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ திட்டமிட்டு இருக்கிறார்கள் என்றும் கூட கூறப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. மேலும் விரைவில் இவர்கள் தங்களுடைய பிரச்சினையை சுமூகமாக பேசி தீர்த்துக்கொண்டு தங்களுடைய வாழ்க்கையை தொடர்வார்கள் என்று கூறப்பட்டது.

ஆனால் நடிகர் ரஜினிகாந்த் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் தோல்வியே மிஞ்சி இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

இந்நிலையில்தான் நடிகர் தனுஷ் தன்னுடைய பெற்றோருடன் 150 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டில் குடியேறி இருக்கிறார். இந்த வீட்டை பார்க்கும் பொழுது இது வீடா அல்லது அரண்மனையா என்ற சந்தேகம் வருகிறது.

அந்த அளவுக்கு படு பிரம்மாண்டமாக இருக்கிறது. போயஸ் கார்டனிலேயே அதிக விலையுள்ள ஒரு வீடு என்றால் அது நடிகர் தனுஷின் வீடு தான் என்று கூறுகிறார்கள்.

பெரிய இடத்து மாப்பிள்ளை என்பதால் பல வெற்றி பெற இயக்குனர்கள் இவரை தேடிச்சென்று பட வாய்ப்பு கொடுத்தார்கள். அவற்றை சரியாக பயன்படுத்திக் கொண்ட நடிகர் தனுஷ் ஐந்து படங்கள் நடித்தால் இரண்டு படங்கள் ஹிட் என்ற ரீதியில் தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் நடித்த கல்லாகட்டினார்.

அதன் பயனாக இன்று 150 கோடி ரூபாய் மதிப்பில் வீடு இல்லை அரண்மனை ஒன்றில் குடியேறி இருக்கிறார். இவருடைய இந்த வீட்டின் புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் ஹாட் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Summary in English : Actor Dhanush has recently made headlines with his purchase of a new house in Chennai worth INR 150 Crores. This is the most expensive residential property ever purchased by an Indian actor and has stirred up a lot of excitement among fans and the media alike.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …