80கள் மற்றும் 90களில் பிரபலமாக இருந்த நடிகர்கள் சிலரை நம்மால் எப்போதுமே மறக்க முடியாது.
ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் கூட நம்முடைய ஆழ்மனதில் அசையாமல் இடம் பெற்று இருப்பார்கள்.
அந்த வகையில், கருத்தம்மா என்ற படத்தில் நடித்ததன் மூலம் 90ஸ் கிட்ஸ் மத்தியில் ஆழமாக பதிந்தவர் நடிகர் ராஜா.
அதன் பிறகு கடலோரக் கவிதைகள், வேதம் புதிது உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர். மிகவும் பிரபலமான நடிகராக உலா வந்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் புதுமுக நடிகர்களின் ஆதிக்கம் அதிகரிக்க இவருடைய மார்க்கெட் குறைந்தது.
அதன் பிறகு துணை நடிகராகவும் குணசத்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் தமிழில் கண்ணுக்கு கண்ணாக மற்றும் ஆதித்ய வர்மா உள்ளிட்ட திரைப்படங்களில் சமீபத்தில் நடித்திருந்தார்.
நீண்ட வருடங்களாக மீடியா வெளிச்சம் படாமல் இருந்த ராஜா அண்மையில் ஒரு பேட்டி ஒன்று பேசியிருக்கிறார்.
அதில் அவரை பார்த்து ரசிகர்கள் 90களில் சினிமாவை கலக்கிய நடிகை ராஜாவா இது..? என்று ஆச்சரியமாக பார்த்து இருக்கின்றனர்.
அவருடைய இந்த பேட்டியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் இதோ,