தமிழ் சினிமாவின் நடிகர் செந்தில் மிகச்சிறந்த காமெடி நடிகர். பாக்யராஜ் நடித்த பொய்சாட்சி படத்தில் தான் செந்தில் அறிமுகமானார். அதன்பின், கவுண்டமணி – செந்தில் என்ற காமெடி கூட்டணி உருவானது. தமிழ் சினிமாவை, இந்த கூட்டணி நீண்ட காலம் ஆட்சி செய்தது.
கடந்த 1980-90களில், கவுண்டமணி – செந்தில் படங்கள் போஸ்டரில் இருந்தாலே, அந்த படத்துக்கு மக்கள் சென்றுவிடுவர். அந்த அளவுக்கு படத்தின் ஹீரோ – ஹீரோயினுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், இந்த காமெடி ஜோடிக்கு தரப்பட்டது. இவர்களுக்கு என, வீரமணி என்பவர் தனியாக காமெடி டிராக் எழுதினார்.
சத்யராஜ், ராமராஜன், ராஜ்கிரண், முரளி போன்ற நடிகர்களின் படங்களில் இந்த காமெடி கூட்டணி இருந்ததால், பல படங்கள் அபார வெற்றியை தொட்டது, காமெடிக்கு, தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
தனியாகவும், சில படங்களில் செந்தில் நடித்து தனிமுத்திரை பதித்திருக்கிறார். அதில், பாய்ஸ் படத்தில் அன்னவெறி கண்ணையன் கேரக்டரை குறிப்பிட்டுச் சொல்லாம். முதுமை காரணமாக, செந்தில் சமீபமாக அதிக படங்களில் நடிப்பதில்லை,
சமீபத்தில் தனது 70வது பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் செந்திலுக்கு, அவரது குடும்பத்தினர் நீண்ட ஆயுள் பெற வேண்டி, பீமரத சாந்தி பூஜை நடத்தி இருக்கின்றனர்.
கடந்த 1984ல் கலைச்செல்வி என்பவரை மணம் செய்துகொண்ட நடிகர் செந்திலுக்கு மணிகண்ட பிரபு ஹேமசந்திர பிரபு என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
சமீபத்தில் தனது 70வது பிறந்த நாளை நடிகர் செந்தில் கொண்டாடினார்.
இதைத்தொடர்ந்து, திருக்கடையூரில் உள்ள அபிராமி அம்பிகை சமேத அமிர்தகாடேஸ்வரர் கோவிலில், நடிகர் செந்திலுக்கு பீமரதசாந்தி பூஜை நடத்தப்பட்டது. நடிகர் செந்தில் நீண்ட ஆயுள் பெற வேண்டி நடத்தப்பட்ட இந்த பூஜையில், நடிகர் செந்தில் மீண்டும் தனது மனைவிக்கு தாலி கட்டி திருமணம் செய்யும் நிகழ்வும் நடந்திருக்கிறது.
அந்த புகைப்படங்கள், தற்போது வைரலாகி வருகின்றன.