47 பேரை திருமணம் செய்தேன்.. ஆனால்.. ஜோதிகாவால் கடுப்பில் சிவகுமார்..!

தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட நடிகர் சிவகுமார் இன்று வரை எந்த கிசுகிசுக்களிலும் சிக்காத கண்ணியவான். இவரது இரு பிள்ளைகளும் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களாக வலம் வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் சூர்யா 10 ஆண்டுகள் காத்திருந்து தான்  காதலித்த ஜோதிகாவை தனது பெற்றோர் சம்பந்தத்தோடு திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தனது வீட்டில் நடிகை ஜோதிகாவை காதலித்த விஷயத்தை அவர் அப்பாவிடம் பகிர்ந்த போது சிவகுமார் கோபம் அடைந்ததோடு மட்டுமல்லாமல், வீட்டில் திருமணமாகாத ஒரு தங்கை இருக்கும் போது திருமணமா? என்ற கேள்வியை வைத்திருக்கிறார்.

மேலும் ஜோதிகாவை திருமணம் செய்து வைக்க நடிகர் சிவகுமார் விரும்பவில்லை. பல வகைகளில் சூர்யாவை மடை மாற்றம் செய்து பார்த்திருக்கிறார். அதற்காக நடிகர் சிவகுமார் தான் 47 பேரை திருமணம் செய்து கொண்டிருக்கிறேன் என கூறினார்.

அதாவது இவர் சினிமாவில் ஹீரோவாக நடித்து வந்த போது சுமார் 47 நடிகைகளை திரைப்படத்திற்காக திருமணம் செய்து கொண்ட நிகழ்வை கூறியதோடு இனி எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஒரு நடிகையை திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருந்ததையும் தெரிவித்திருக்கிறார்.

மேலும் நடிகர் சிவகுமார் பெற்றோர் பார்த்து வைத்த பெண்ணைத்தான் திருமணம் செய்து கொண்டதாக கூறியதோடு தனது மகன் சூர்யா ஒரு நடிகையை காதலிப்பதை எண்ணி ஆரம்ப நாட்களில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

எனவே இடைப்பட்ட நாட்களில் ஒரு கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளான நடிகர் சிவகுமார் மகனின் மனநிலையை மாற்ற முடியாத காரணத்தால் தான் அவர்களின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினார்.

இதனை அடுத்து பொறுப்போடு தன் தங்கையின் திருமணத்தை முன் நின்று நடத்திய பிறகு அனைவரது சம்மதத்தையும் பெற்று ஜோதிகாவை நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யா திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவரது தம்பி கார்த்திக்கு அவர்கள் இனத்திலேயே பெண்ணைப் பார்த்து நடிகர் சிவகுமார் திருமணம் செய்து வைத்தார். அதை கார்த்தியும் ஏற்றுக் கொண்டார்.

எனினும் என்ன சொல்வது திரைப்படங்களில் 47 முறை திருமணம் செய்து கொண்ட சிவக்குமார் மறந்தும் கூட ஒரு நடிகையை திருமணம் செய்து கொள்ளாமல் பெற்றோர் பார்த்து வைத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

அது சூர்யா விஷயத்தில் நடக்கவில்லை என்ற மன கஷ்டம் சிவகுமாருக்கு அடி மனதில் உள்ளது. எனவே தான் ஜோதிகா மீது எற்பட்ட கடுப்பு இன்னும் அவருக்குள் மாறாமல் அப்படியே உள்ளது என கூறலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *