“அந்தக் கொடுமையை என் வாயால எப்படிங்னா சொல்லுவேன்..” இயக்குனரை நம்பி ஏமாந்த விஜய்-ன் ஓபன் டாக்..!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சுறா படம் பற்றி புதிதாக சொல்வதற்கு எதுவும் கிடையாது. கோலிவுட்டின் முன்னணி நடிகரான விஜய் ஒரு இயக்குனரை நம்பி சென்று படுதோல்வியை சந்தித்த படம்.

இந்த படம் இந்த படத்தில் நடித்தது குறித்து நடிகர் மனோபாலாவிடம் மனம் திறந்து இருக்கிறார் நடிகர் விஜய். அதனை நடிகர் மனோபாலா சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.

பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்களின் மகனான நடிகர் விஜய் ஆரம்ப காலத்தில் அவருடைய தந்தையின் உதவியுடன் சில திரைப்படங்களில் நடித்து வந்தார். அடுத்தடுத்து இவருக்கென ரசிகர் பட்டாளம் பெருக பெருக்க இவரை வைத்து படம் தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் முன் வந்தனர்.

ஒரு கட்டத்தில் தனக்கென தனி மார்க்கெட்டை உருவாக்கி தற்போது தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும். அரசியலில் நுழையும் ஆசையிலும் நடிகர் விஜய் இருக்கிறார் என்பது இவருடைய நிகழ்கால நடவடிக்கைகளை பார்க்கும் பொழுது தெரிகிறது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இப்படி மாஸ் நடிகராக இருக்கும் விஜய் எப்படி போன்ற ஒரு கதையை தேர்வு செய்தார் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இதில் நடிகர் மனோபாலா கொஞ்சம் வித்தியாசமாக நடிகர் விஜய் இடமே இந்த கேள்வியை கேட்டிருக்கிறார்.

அதற்கு நடிகர் விஜய் கூறியதாவது, அதை எங்கனா கேக்குறீங்க.. அந்த படத்துல.. டேய் அவனை ஏன்டா தண்ணில போட்டு வந்தீங்க.. அவன் சுறா டா.. அப்படின்னு இயக்குனர் சொன்னார்.

அதை நம்பி நடிச்சேன் அண்ணா என்றார். இது வெறும் டயலாக் தானே.. இதை மட்டும் கேட்டுட்டு நடிக்க ஒத்துக்கிட்டீங்களா..? கதையை கேட்கவில்லையா..? என்று கூறினேன்.

மனோபாலாவின் இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் டயலாக் மட்டும் கேட்டு ஒரு படத்தை ஓகே செய்யலாமா..? அதுவும் தன்னுடைய ஐம்பதாவது படத்தை இப்படியா செய்வது..? என்று கேள்விகள் பறந்து வருகின்றன.

ஆனால் சுறா தோல்விக்கு பிறகு சுதாரித்து கொண்டு நடிகர் விஜய் பல்வேறு வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் இவர் நடிப்பின் வழியாக கூடிய படங்கள் அனைத்துமே 100 கோடி வசூலை தாண்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Summary in English : It is no surprise that Vijay accepted the role of Sura with just one punch dialogue and went on to become an overnight sensation.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …