அந்த மாதிரி நடிகைகள் போல் போட்டோ வெளியிட்ட நடிகை அக்ஷரா கவுடா

தமிழ் ஹிந்தி கன்னடா தெலுங்கு என இந்திய திரைப்படங்களில் நடித்து வரும் முன்னணி நடிகையான அக்ஷரா கவுடா அவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிறந்தவர். இவர் தமிழில் வெளியான உயர்திரு 420 என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.

இவர் பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளியில் தன்னுடைய பள்ளி படிப்பை முடித்துவிட்டு மங்களூரில் உள்ள தனியார் கல்லூரியில் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்தார் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போது மாடலிங் துறையில் ஆர்வமாக இருந்ததால் பல்வேறு விளம்பர படங்களுக்கு நடித்துக் கொடுத்தார். இவர் விளம்பர துறையில் தொழில்நுட்ப பிரிவிலும் சிறிது காலம் பணியாற்றினார்.

2011 ஆம் ஆண்டு தமிழில் வெளியான உயர்திரு 420 என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் அக்ஷரா கௌடா அவர்கள் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் துணை கதாநாயகியாக நடித்திருந்தார் இந்த படத்தை இயக்கியவர் எஸ் பிரேம்நாத் அவர்கள் ஆவார். இந்த படம் தமிழில் மிகப் பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும் இவருடைய நடிப்பு பெரிதும் பாராட்ட பெற்றது.

அதை ஆண்டு ஹிந்தியில் வெளியான தி ஷேப்ஸ் ஆப் கிரே என்ற படத்தில் முக்கிய கதாநாயகியாக நடித்திருந்தார் இந்த படம் ஹிந்தி திரை உலகில் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை தொடர்ந்து ஹிந்தியில் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன. 2013 ஆம் ஆண்டு ஹிந்தியில் ரங்கீஸ் என்ற திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார்.

2012 ஆம் ஆண்டு துப்பாக்கி படத்தில் ஒரு சில காட்சிகளில் வந்தாலும் அதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய புகழை அடைந்தார் 2013 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ஆரம்பம் என்ற நடிகர் அஜித்குமாரின் திரைப்படத்தில் வில்லியாக நடித்திருந்தார். மேலும் 2014 ஆம் ஆண்டு இரும்பு குதிரை என்ற திரைப்படத்தில் அதர்வாவுடன் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தார் இவர்.

2017 ஆம் ஆண்டு தமிழில் வெளியான போகன் என்ற திரைப்படத்தில் அரவிந்த்சாமி மற்றும் ஜெயம் ரவி ஆகியோர்களுடன் முக்கிய கதாநாயகியாக நடித்திருந்தார். அதே ஆண்டில் வெளியான சங்கிலி புங்கிலி கதவ திற என்ற திரைப்படத்திலும் கேமியோ ரோலில் நடித்திருந்தார் நடிகை அக்ஷரா அவர்கள்.

அதன் பிறகு தமிழில் மாயவன் என்ற திரைப்படத்திலும் இடியட் என்ற திரைப்படத்திலும் அதன்பிறகு 2022 ஆம் ஆண்டு தி வாரியர் என்ற தெலுங்கு மற்றும் தமிழில் ரிலீசான திரைப்படத்திலும் நடித்திருந்தார் இவர். இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் இவர் சோசியல் மீடியாவில் வெளியிடும் புகைப்படங்கள் மிகவும் கவர்ச்சியாகவும் ரசிக்கும் வண்ணமும் இருப்பதால் சோசியல் மீடியா ரசிகர்கள் இவருடைய பக்கத்தை அதிகமாக விரும்பி வருகின்றனர் அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …